சீமாட்டி மாக்பத் நுழைகிறாள் கையில் கடிதத்தை வாசித்துக்கொண்டு-
சீமாட்டி மாக்பெத் :"சூனியக்காரிகள் நான் யுத்தத்தில் வெற்றிபெற்றபின் என்னைச் சந்தித்தன -அப்போதிலிருந்துதான் அவைகளுக்கு இயற்கைக்கு மீறிய அதீத உணர்வு உண்டு என்று புரிந்துகொண்டேன்-அவைகளிடம் மேன்மேலும் கேள்விகள் கேட்டு துளைத்தேன்-அவை காற்றில் மறைந்துவிட்டன!வியப்பிலிருந்த என்னை மன்னர் அனுப்பிய ஏவலாளிகள் சந்தித்து-" வாழ்க காடர் பிரபு!' என்று வாழ்த்தினர்ஏற்கனவே சூனியக்காரிகள் உரைத்தவாறு! அவைகள் என்னை " வருங்கால அரசன்!' என்று கூப்பிட்டதும் நினைவுக்கு வந்தது.இந்நற்செய்தியை உன்னுடன்-என் அன்பிற்குரிய மனைவியுடன் சொல்லி- அதன்மூலம் ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்ற காலத்தின் மேன்மை குறித்து உணரவுமே இக்கடிதம் . இந்த செய்தியை இதயத்தில் ரகசியமாய் வைத்திரு-விரைவில் நேரில் சந்திக்கிறேன்"
கடிதத்திலிருந்து முகத்தை விலக்கி-" நீங்கள் இப்போது கிளாமிஸ் மற்றும் காடருக்கும் பிரபுவாகிவிட்டீர்கள்-மன்னராகவும் ஆளப்போகிறீர்கள்!ஆயினும் தங்கள் உண்மை இயல்பு குறித்தே அச்சமேற்படுகிறது-நீங்களோ மனித அன்பின் முழுமையான பால் போன்ற மனத்தை உடையவர்.வரும் வாய்ப்பை முரட்டு வழியில் அடைய நினைக்கும் நபர் நீங்களா? ஆற்றல் மிக்கவர் -ஆசையும் உண்டுதான்-ஆனால் தவறான வழிமுறைக்கு அஞ்சுபவர் ஆயிற்றே நீங்கள்!செய்யும் செயல்கள் குறித்து ஒரு நல்லவன்போல் அல்லவா செயல்படுபவர் நீங்கள்!எவரையும் ஏமாற்ற எண்ணுபவரும் அல்ல-ஆயினும் உரிமை அற்றதை அடைய ஆசைப்படுகிறீர்கள்-க்ளாமிஸ் பிரபு மட்டுமல்ல-அதற்குமேலும் வளரும் திறமை படைத்தவர்.எனினும் அஞ்சுகின்ற இயல்பும் உங்களுக்கு உண்டல்லவா?விரைந்து வாருங்கள்-உமது செவிகளில் எனது சொற்களை நிரப்பி-தடித்த எனது நாக்கின் தைரியத்தை உமக்குப் புகட்டி-எச்சரித்து -எதிர்வரும் எந்தத் தடையையும் மீறும் சக்தியை உமக்குத் தருவேன்.-விதியோ அதீத இயற்கைச் சக்தி காட்டும் வழிகளில்!
From Shakespeare's Macbeth.

Comments

Popular posts from this blog