உலகமே ஓர் நாடகமேடை-ஆண்,பெண் -அனைவரும் நல்ல நடிகர்களே!
அனைவரும் சென்றுகொண்டும் வந்துகொண்டும் இருப்பார்கள் -
ஒவ்வொருவரும் பலபலப்பாத்திரங்களில் நடிப்பவர்கள்தாம்!
ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஏழு பகுதிகளாக இருக்கும்-
முதன் முதலில்-குழந்தையாக-அழுதும் சிணுங்கியும்
செவிலியர் கரங்களில்-அடுத்து அடம்பிடிக்கும் பள்ளிச் சிறுவனாக-
கையில் புத்தகப் பையுடன் பால்வடியும் முகத்துடன்-
பள்ளிக்கு வேண்டாவெறுப்புடன் நத்தைபோல் ஊர்ந்து செல்வான்,
அடுத்துக் காதலனாக-ஊது உலைபோன்று பெருமூச்சுக்களை
விட்டுக்கொண்டும்-காதலியின் முக எழிலைக் குறித்துக் கவிதை எழுதியும் -
நான்காம் பகுதியில் வீரனாகப் பரிணமித்து-வாய் நிறைய வீர வசனத்துடன்-
சிறுத்தையின் தாடியோடு-எப்போதும் தனது மானத்தைக் காப்பதில் குறியாக-
குமிழ்போல் உடையும் புகழுக்காகப் போர்க்களத்தில் பீரங்கிகளுக்குமுன்
தனது வாழ்க்கையையே பணயம் வைக்கும் நிலையில்!
ஐந்தாவது பகுதியில் ஒரு நீதிபதி நிலையில்-லஞ்சலாவண்யத்தை அடையாளம் காட்டும்
தொந்தி தொப்பையுடனும்-கண்களில் கடுமையை வரவழைத்தும்-நன்கு வெட்டிய தாடியுடனும்-
அறிவாழம் மிக்கச் சொற்களுடனும்-சமீபத்திய சம்பவங்களை சுட்டிக்காட்டிக்கொண்டும் ஓர் வேஷம்!
ஆறாவதாக -வயதானவனாய்--உடல் மெலிந்தும் சாதா செருப்புடன்--
முகத்தில் கண்ணாடியும் அருகே பணப்பையுடனும்-
இளமையில் இருந்தகாலுறை தளர்ந்துபோய் -பாவம்-
கம்பீரமாய் ஒலித்த அவன் குரல் சிசுவின் கீச்சிடும் குரலாக மாறி!
வாழ்க்கை நாடகத்தில்-விந்தையான பல நிகழ்ச்சிகளாலான வரலாற்றில்-கடைசிக் காட்சியில்
நம் கதாநாயகன் நுழைவதோ-மறதியில் மயங்கி-இரண்டாம் கைப்பிள்ளைபோல்-
பற்களின்றி-பார்வையின்றி-சுவையுமின்றி-ஏதுமின்றி-அய்யகோ!
Based on As You Like It-of Shakespeare.

Comments

Popular posts from this blog