எது உனக்குத் துன்பம் தந்தது -குதிரைவீரா!
தனியே சுற்றிச் சுற்றி வருகிறாயே!
ஏரியும் வற்றியது-செடிகளும் வாடின-
ஒரு பறவையும் பாடுவதில்லை!
எதனால் உனக்கு கேடு-குதிரைவீரா!
ஏன் இப்படி ஓய்ந்துபோய்-சோகமாய்?
அணில்கள் களஞ்சியம் நிரம்பியுள்ளது-
அறுவடையும் நன்கு முடிவுற்றது.
உன் முகம் ஏன் லில்லி மலராய் வெளுத்திருக்கு-
முத்து முத்தாய் வியர்வை பூத்திருக்கு -
சோகையில் சோர்ந்து மங்கியிருக்கு-
உன் பளபளக்கும் கன்னமெல்லாம்!
குதிரைவீரன்: வயலருகே ஒருகன்னிப்பெண்!
அழகு அவள் அழகு -தேவதையைப்
பார்த்தேன்-நீள்குழலும் சிற்றடியும் கூடி-
ஆனால் கண்கள் இரண்டிலும் கடுமை!
அவள் தலையில் சூட மலர்வளையம் செய்தேன்
கரங்களுக்கும் இடைக்கும் அணிவித்தேன்--
பார்த்தாள் என்னை-மையலுற்றாள்மனமுவந்து-
கலந்தோம்-உவகையில்-களித்தே மகிழ்ந்தோம்!
எனது குதிரையில் அவளை அமர்த்தி விரைந்தோம்
பயணித்தோம்-நாள் முழுவதும்-சென்றோம்-
ஓரக்கண்ணால் பார்த்தவாறே என்னை மயக்கினாள்-
கதைகளில்வரும் ரதியைப்போல் பாடிப்பாடி !
ருசிமிக்க கிழங்குகளும் இனிப்பு ரசமும்
உண்ணவும் பருகவும் தந்தாள்-அமிர்தமே!
புரியா மொழியில் விசும்பினாள்-உரைத்தாள்-
"நான் மிகமிக நேசிப்பது உன்னையே-உண்மையே "
வனதேவதை உலவிடும் குகைக்கே சென்றோம்
விம்மினாள்-விகாசித்துப் பெருமூச்செரிந்தாள்!
நானும் மயங்கி அவள் கண்களைப் பொத்தியே-
நான்குமுறை இனியவே முத்தமிட்டு மகிழ்ந்தேன்!
தாலாட்டித் தாலாட்டித் தூங்க வைத்தாள் என்னை
சுகமாக கிறங்கி உறங்கினேன்-என்ன கொடிய கனவு!
எல்லாம் போயிற்று-எல்லாமே போயிற்று-என்ன இது?
அந்தக் குகையினுள் குளிர்ந்த மலையருகே-
நோயுற்றோர்போல் வெளுத்துப்போன அரசர்களை
இளவரசர்கள் - பெரும் வீரர்கள்-சோகத்தில் பார்த்தேன்!
உரக்கவே கூவினர் என்னைப் பார்த்து-"அய்யகோ!
உன்னையும் சிறை பிடித்து விட்டாளே!"-என்றே..
அவர்களின் உலர்ந்த உதடுகளைக் கண்டு வருந்தினேன்
வாய்பிளந்து அச்சத்தில் நின்றனர் மங்கிய ஒளியில் -
கண் விழித்துப் பார்த்தேன்-இங்கே நிற்கின்றேன்-
குளிர்மிகு இம் மலையருகே- தன்னந்தனியே!
இதுவே இங்கு நான் உலவிவருவதின் நோக்கம்-
யாருமற்றும் நோயில் இருப்பவன்போல் -
ஏரிஓரச் செடிகளும் கருகின-ஏரியும் வற்றி-
யாதொரு பறவையும் பாடுவதும் கேட்கிலேன்!"
Based on John Keats' La Belle Dame sans merci.

Comments

Popular posts from this blog