சீமாட்டி மாக்பத் நுழைகிறாள் கையில் கடிதத்தை வாசித்துக்கொண்டு- சீமாட்டி மாக்பெத் :"சூனியக்காரிகள் நான் யுத்தத்தில் வெற்றிபெற்றபின் என்னைச் சந்தித்தன -அப்போதிலிருந்துதான் அவைகளுக்கு இயற்கைக்கு மீறிய அதீத உணர்வு உண்டு என்று புரிந்துகொண்டேன்-அவைகளிடம் மேன்மேலும் கேள்விகள் கேட்டு துளைத்தேன்-அவை காற்றில் மறைந்துவிட்டன!வியப்பிலிருந்த என்னை மன்னர் அனுப்பிய ஏவலாளிகள் சந்தித்து-" வாழ்க காடர் பிரபு!' என்று வாழ்த்தினர்ஏற்கனவே சூனியக்காரிகள் உரைத்தவாறு! அவைகள் என்னை " வருங்கால அரசன்!' என் று கூப்பிட்டதும் நினைவுக்கு வந்தது.இந்நற்செய்தியை உன்னுடன்-என் அன்பிற்குரிய மனைவியுடன் சொல்லி- அதன்மூலம் ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்ற காலத்தின் மேன்மை குறித்து உணரவுமே இக்கடிதம் . இந்த செய்தியை இதயத்தில் ரகசியமாய் வைத்திரு-விரைவில் நேரில் சந்திக்கிறேன்" கடிதத்திலிருந்து முகத்தை விலக்கி-" நீங்கள் இப்போது கிளாமிஸ் மற்றும் காடருக்கும் பிரபுவாகிவிட்டீர்கள்-மன்னராகவும் ஆளப்போகிறீர்கள்!ஆயினும் தங்கள் உண்மை இயல்பு குறித்தே அச்சமேற்படுகிறது-நீங்களோ மனித அன்பின் ...
Popular posts from this blog
ஜூலியஸ் சீசர் ----அங்கம் 2 ,காட்சி 1 : ப்ருடஸ்: சீசரைக் கொல்லுதல் சரியே.இதற்கானத் தனிப்பட்டக் காரணம் எனக்கு ஏதுமில்லை-ஆயினும் பொதுநலன் கருதி...அவன் முடி சூட்டிக்கொள்ள விரும்புகிறான்.எப்படியெல்லாம் அவன் குணம் மாறும் என்பதே என் கேள்வி.கோடைக்காலச் சூரிய சூட்டில்தான் பாம்புக்குட்டிகள் வெளியே வரும்--நாம்தான் பார்த்து நடக்கவேண்டும்.அவன் விருப்பத்திற்கு விட்டுவிட்டால் தீமையே அவன் செய்வான்.அதிகாரத்திற்குச் செல்லும் ஆட்சியாளர்கள் பலவீனமே-கருணையும் இரக்கமும் இல்லாமல்- மாறிவிடுவதுதான் .சீசரைப்பற்றிச் சொல்லவேண்டுமெனில்,அவன் என்றுமே அறிவை உணர்ச்சிகளுக்குமேலாக வைத்திருந்ததில்லை.வழக்கமாகப் பார்ப்பதுதான் இது. ஏணியைப்போல் அடங்கி இருப்பர் மேலே செல்லும்வரை-அதன்பின் தன்னை உயர்த்தியவர்களுக்கு முதுகுப்புறத்தைக்காட்டி புறந்தள்ளுவரே.. அவர்கள் மென்மேலும் உயரத்திற்குச் செல்வர்.,அங்கிருந்து மேகக்கூட்டங்களில் உலாவி,கடந்துவந்த படிகளை உதைத்துவிட்டு ,மேலும் முன்னேறிச் செல்வர்.சீஸரும் அப்படித்தான்.எனவே இதுவே அவனைத் தடுப்பதற்கானத் தருணம்.என்னுடைய பிரச்சினை அவனது வருங்காலமே-இப்படித்தான் நான் சிந்திக்கிறேன்: த...
Based on The Waste Land by T.S. Eliot 2...A Game of Chess பளபளவென பளிங்கிலான சிம்மாசனத்தில் ராணிபோல் ... அவள் ஏந்திய கண்ணாடிக்கலத்திற்கு மேற்புறம் திராட்சைகொடிகள் படர்ந்து தங்க நிறக்காமனும் (மற்றோர் கலத்தின் மேற்புறம் அவன் கண்கள் பொத்தி) இரட்டிப்பு ஜ்வலிப்பில் ஏழுகிளைகளோடு மெழுகு விளக்கும் அலங்கரிக்க மேசையெங்கும் ஒளி பரப்பும் அற்புதம் அவளது நகைகள் மின்னி அந்த இடமே ஒளிர்ந்தது பட்டாடை போர்த்தியபெட்டிக்களும் குவிந்தன தந்தங்களென்ன தகதக என்று மின்னும் பாத்திரங்கள் கூட்டுச்சேர்க்கையில் நறுமணத்தைல வாசம் உணர்வுகளையெல்லாம் மயங்கச் செய்யும் சூழல் ஜன்னல்வழிவரும் காற்றும் மணக்க ஓங்கித் திமிறி எரியும் மெழுகு விளக்குகள் அவை தரும் பலவகை வண்ணப்புகைகளும் -மேற்புற சுவரின் சிற்பங்கள் செப்புதகடுகளும் கடல் மரத்தில் கடைந்த உத்திரங்களும் பச்சை ஆரஞ்சு நிறங்களில் பற்பல மணிகளின் நுட்பங்கள் அவைகளின் மங்கலான ஒளியில் தனித்துத்தெரியும் செதுக்கிய டால்பின் நீந்திவரும் எழில் காட்சிகள் அக்காலப்புராதனத் திரைச் சீலைகள் காட்சியில் வெளியே ஜன்னல்வழித்தெரியும் பசுமை போல் பிலோமெல் கதறக்கதற...
Comments
Post a Comment