"சொற்கள் என் செய்யும் சிந்தையில் நிறைந்த மலர்ச் சித்திரங்கள் கற்பனைத் தேரினில் பறந்து வருகையில்?  வடிவம் கொடுத்தாலும் காலம் கலைத்த கோலங்கள் கனவாக சென்றுவிட்டன.கால்போன போக்கில் நடப்பதும்.நேரம் தெரியாமல் பேசுவதும் ,ரசிப்பதும் சிரிப்பதும் இளமைப் பருவ அனுபவங்கள் என்றும் முதுமை அடையாதன.எங்கள் பனகல் வீதியில் நடக்கத துவங்கி கோரிப்பாளையம், தல்லாகுளம் வழியாக ரேஸ் கோர்ஸ் மைதானம் வரை சென்று-பின்னர்  இப்போதய கேகே நகர் மெயின் வீதி மற்றும் காந்தி மியூசியம் .மருத்துவக் கல்லூரி வழியாக வீட்டுக்குத் திரும்பிவருகையில் மணி ஒன்பதாகிவிடும்.சுமார் மூன்று மணி அல்லது நான்கு மணித்துளிகள் கோடைக்காலத்தில் பலநாட்கள் பிடித்த  நண்பர்களுடன் நடந்திருப்போம்.அல்லது மேல்பாலம் வழியாக நடந்து மெயின் சாலைகள் கடந்து மீனாட்சி டாக்கீஸ் வரை நடந்து சென்று இந்திப்படம் பார்த்துவிட்டுத் திரும்பியிருக்கிறோம்.அப்போதைய மதுரை இந்த அளவுக்கு கூட்டமாய் இருக்காது.ட்ராபிக்கும் அதிகமில்லை.சிலசமயங்களில்  சிம்மக்கல்  சென்று  தமிழ் சங்கம் சாலை தாண்டி தேவி அல்லது பரமேஸ்வரிக்கும் சென்று வருவோம்.இடையிடேயே டீ..ஏதேனும் பக்கோடா அல்லது வடை.

இப்போது மதுரை சென்றால் இப்படிச் செல்லமுடியாத ஏக்கம் உண்டு.யார் முதலில் நடக்கச் சம்மதிப்பார்? எல்லோரும் காரும், பங்களாவுமாய் சுகமாக இருக்கையில்? வம்புக்காக எவரையும் அழைத்துக்கொண்டு ஊர் சுற்றத்துவங்கினாலும் அவர்கள் வீட்டுக்குச் செல்லவே குறியாக இருப்பதில் வியப்பென்ன?நான்கு ஆண்டுகளுக்குமுன் மதுரைக்கு வந்தபோது ஜெயராமுடன் சென்று சொக்கிகுளம் அருகே வடமலையன் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்பட்ட பேராசிரியர் வசந்தனைச் சந்தித்துவந்ததில் மனநிறைவு இருந்தது. அடுத்தமுறை அவர் இல்லை-மறைந்துவிட்டார்.இப்போதெல்லாம் அழ வும்மாட்டோம்-அப்படிப்பட்ட ஞானவான்கள்! என்ன மாதிரியான முன்னுதாரண பேராசிரியர்! கிறிஸ்டின் காலெஜ்ல்  சுப்பாராவ்வுடன் பணியாற்றியவர்.அமெரிக்கன் கல்லூரியில் எங்களுக்கு மிகவும் பிடித்த திறமைமிகுப் பேராசான் அவர்.'சிவாஜி ஓவர் ஆக்ட்இலிருந்து ஜெமினியின் மித நடிப்பிலிருந்து உலகின் தலை சிறந்த நடிகர்கள் பலரையும் கண் முன் காண்பிக்க வல்ல அற்புதமான கலை விமர்சகர் அவர். சத்தம் போட்டுப் பேசத் தெரியாதவர்.-எனினும் எந்த மாணவனையும் தன சொற்திறனால் கட்டிப்போடும் வல்லமை பெற்றவர்.அருமையான ஆங்கில நாடகங்கள் பலவும் கர்ட்டன்  கிளப் மூலம் நடத்தி எங்களைசெதுக்கிய இயக்குனர் அவர். நான் தேவகோட்டை கல்லாரிக்கு விண்ணப்பித்திருக்கிறேன் என்றவுடன் அங்கு ஆங்கிலத்துறைத்தலைவர் -அவரது நண்பர் ஸ்ரீபதி சாருக்கு ஒரு கடிதம் கொடுத்தார்: நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் ஆசிரியர் இவரே' என்று ஒரே வரியில் ரெகமென்ட் செய்து அங்கே நான்  ஓராண்டு பணிபுரியக் காரணமானவரில் அவரும் ஒருவர். பின்னர் நான் மன்னர் கல்லாரிக்கு வந்தபின் எச்சரித்தார் 'வேறுபணி தேடிக்கொள்ளாவிட்டால் ,எதெற்கும் அப்புறம் லாயக்கில்லை' என்று.என் திருமண ரெசெப்ஷனுக்கும்  மனைவியுடன் வந்து வாழ்த்திய நல்லிதயம் படைத்தவர்-இன்றும் ஆயிரமாயிரம் இதயங்களில் வாழும் சொல்லின் செல்வர்.ஷேkஸ்பியரை அவர்போல் நடத்த யாரால் முடியும்? விவிலிய ஆங்கிலத்திலும் கரைகண்டவர். 'கண்டறியாதன பலவும் நாங்கள் அவர் பாடத்தின்மூலம் கண்டோம்'..ஜெயகாந்தனுக்குப் பிடித்த நண்பராகவும் விளங்கினார்!
ஆங்கில இலக்கியம் சேர்ந்து  முதல்வருட முடிவில் ஜேவி இடம் சென்று பிழையற ஆங்கிலம் கற்க எனக்கு உதவிசெய்யக் கோரினேன்-நான் தமிழ் மீடியம் தான் பள்ளிகளில் பயின்றவன்.ஆங்கிலத்தில் நல்ல பரிச்சயம் இருந்தாலும் பேச கோர்வையாய் வராது.அவர் என் வீட்டுச் சூழல் பற்றிக்  கேட்டுவிட்டு ,சில புத்தகங்கள் கொடுத்துவிட்டு-நாலுநாட்கள் கழித்து வரச் சொன்னார்.ஆங்கிலப்புத்தகம் புரியாதே என்றேன்."உன்னைப் படித்துவிட்டுவா என்றேன்"-என்றார்.சிரத்தையுடன் நாலுநாட்களில் அந்நூல்களைப் படித்துவிட்டு மீண்டும் சந்தித்தேன்அவரது வீட்டில்.அப்போதுஅவர் ராமமூர்த்தி தெரு-சொக்கிகுளத்தில் இருந்தார்.தேனீர் கொடுப்பார்-அன்புடன் பழகுவார்.மீண்டும் ஐந்தாறு நூல்களை படித்து வரச் சொன்னார்.அந்த 69  ஆம் வருடக் கோடையில் இருபதுநாவல்கள் படித்திருப்பேன்.இரண்டாம் ஆண்டு துவங்குகையில் வகுப்பில் என்னை எந்த நூல்கள் படித்தேன் என்று ஆங்கிலத்தில் பதிலளிக்கச் சொன்னார்.நான் ஊமை சிவாஜி சரஸ்வதி  அருள்பெற்று பேச ஆரம்பித்ததுபோல் தங்கு தடையின்றிப்  பேசலானேன்-என் ஆங்கிலத் தேர்ச்சி அவர் அளித்த கொடை! எத்தனையோ என்போன்ற மாணவர்களைப்பேச  வைத்த -அந்தக் கால கோல்ட் மெடல் வாங்கிய கற்றுத்துறை போகிய பெரியார் அவர். 

நான் ஆசிரியர் மன்ற போராட்டங்களில் ஈடுபடுவதைக் கண்ணுற்று-ஓர் நாள் என்னிடம்-'என்ன நீ இன்குலாப் சிந்தாபாத்' என்று கோஷமிடுகிறாயே-இன்குலாப் என்றால் அர்த்தம் தெரியுமா '-என்றார். 'புரடசிக்கு அர்த்தமே நீங்கள் சொல்லிக்கொடுத்து வளர்ந்தேன்.இங்கே 'மாற்றம்'என்ற அளவிலேயே அதை பயன் படுத்துகிறேன்' -என்றேன்-புன்னகைத்தே சென்றுவிட்டார்.பிறிதொரு சமயம் அவருக்கு  இதய அறுவை சிகிச்சை நடந்தபின் சந்தித்தேன்-அவர் அதை பற்றிச் சொன்னவுடன்-நான் -உங்களுக்கு இதயம் வலது பக்கம் அல்லவா இருக்கிறது என்றே சொன்னதின் பொருளை உணர்ந்து புன்முறுவல் பூத்தார்.அவரை மன்னர் கல்லூரிக்கும் வரவழைத்து ஷேக்ஸ்பியரைப்  பற்றி பேச வைத்து ஆசைதீரக் கேட்டோம்.பந்தா இல்லாத அறிவாளி, உள்ளதை  உணர்த்தும் ஆற்றல் மிக்கவர், கார்ட்டூன் வரைவதிலும் இணையற்றவர்.ஒரு சகாப்தமே அவர்தம் வாழ்வு!Madurai O madurai 41."

சொற்கள் என் செய்யும் சிந்தையில் நிறைந்த மலர்ச் சித்திரங்கள் கற்பனைத் தேரினில் பறந்து வருகையில்? வடிவம் கொடுத்தாலும் காலம் கலைத்த கோலங்கள் கனவாக சென்றுவிட்டன.கால்போன போக்கில் நடப்பதும்.நேரம் தெரியாமல் பேசுவதும் ,ரசிப்பதும் சிரிப்பதும் இளமைப் பருவ அனுபவங்கள் என்றும் முதுமை அடையாதன.எங்கள் பனகல் வீதியில் நடக்கத துவங்கி கோரிப்பாளையம், தல்லாகுளம் வழியாக ரேஸ் கோர்ஸ் மைதானம் வரை சென்று-பின்னர் இப்போதய க...ேகே நகர் மெயின் வீதி மற்றும் காந்தி மியூசியம் .மருத்துவக் கல்லூரி வழியாக வீட்டுக்குத் திரும்பிவருகையில் மணி ஒன்பதாகிவிடும்.சுமார் மூன்று மணி அல்லது நான்கு மணித்துளிகள் கோடைக்காலத்தில் பலநாட்கள் பிடித்த நண்பர்களுடன் நடந்திருப்போம்.அல்லது மேல்பாலம் வழியாக நடந்து மெயின் சாலைகள் கடந்து மீனாட்சி டாக்கீஸ் வரை நடந்து சென்று இந்திப்படம் பார்த்துவிட்டுத் திரும்பியிருக்கிறோம்.அப்போதைய மதுரை இந்த அளவுக்கு கூட்டமாய் இருக்காது.ட்ராபிக்கும் அதிகமில்லை.சிலசமயங்களில் சிம்மக்கல் சென்று தமிழ் சங்கம் சாலை தாண்டி தேவி அல்லது பரமேஸ்வரிக்கும் சென்று வருவோம்.இடையிடேயே டீ..ஏதேனும் பக்கோடா அல்லது வடை.

இப்போது மதுரை சென்றால் இப்படிச் செல்லமுடியாத ஏக்கம் உண்டு.யார் முதலில் நடக்கச் சம்மதிப்பார்? எல்லோரும் காரும், பங்களாவுமாய் சுகமாக இருக்கையில்? வம்புக்காக எவரையும் அழைத்துக்கொண்டு ஊர் சுற்றத்துவங்கினாலும் அவர்கள் வீட்டுக்குச் செல்லவே குறியாக இருப்பதில் வியப்பென்ன?நான்கு ஆண்டுகளுக்குமுன் மதுரைக்கு வந்தபோது ஜெயராமுடன் சென்று சொக்கிகுளம் அருகே வடமலையன் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்பட்ட பேராசிரியர் வசந்தனைச் சந்தித்துவந்ததில் மனநிறைவு இருந்தது. அடுத்தமுறை அவர் இல்லை-மறைந்துவிட்டார்.இப்போதெல்லாம் அழ வும்மாட்டோம்-அப்படிப்பட்ட ஞானவான்கள்! என்ன மாதிரியான முன்னுதாரண பேராசிரியர்! கிறிஸ்டின் காலெஜ்ல் சுப்பாராவ்வுடன் பணியாற்றியவர்.அமெரிக்கன் கல்லூரியில் எங்களுக்கு மிகவும் பிடித்த திறமைமிகுப் பேராசான் அவர்.'சிவாஜி ஓவர் ஆக்ட்இலிருந்து ஜெமினியின் மித நடிப்பிலிருந்து உலகின் தலை சிறந்த நடிகர்கள் பலரையும் கண் முன் காண்பிக்க வல்ல அற்புதமான கலை விமர்சகர் அவர். சத்தம் போட்டுப் பேசத் தெரியாதவர்.-எனினும் எந்த மாணவனையும் தன சொற்திறனால் கட்டிப்போடும் வல்லமை பெற்றவர்.அருமையான ஆங்கில நாடகங்கள் பலவும் கர்ட்டன் கிளப் மூலம் நடத்தி எங்களைசெதுக்கிய இயக்குனர் அவர். நான் தேவகோட்டை கல்லாரிக்கு விண்ணப்பித்திருக்கிறேன் என்றவுடன் அங்கு ஆங்கிலத்துறைத்தலைவர் -அவரது நண்பர் ஸ்ரீபதி சாருக்கு ஒரு கடிதம் கொடுத்தார்: நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் ஆசிரியர் இவரே' என்று ஒரே வரியில் ரெகமென்ட் செய்து அங்கே நான் ஓராண்டு பணிபுரியக் காரணமானவரில் அவரும் ஒருவர். பின்னர் நான் மன்னர் கல்லாரிக்கு வந்தபின் எச்சரித்தார் 'வேறுபணி தேடிக்கொள்ளாவிட்டால் ,எதெற்கும் அப்புறம் லாயக்கில்லை' என்று.என் திருமண ரெசெப்ஷனுக்கும் மனைவியுடன் வந்து வாழ்த்திய நல்லிதயம் படைத்தவர்-இன்றும் ஆயிரமாயிரம் இதயங்களில் வாழும் சொல்லின் செல்வர்.ஷேkஸ்பியரை அவர்போல் நடத்த யாரால் முடியும்? விவிலிய ஆங்கிலத்திலும் கரைகண்டவர். 'கண்டறியாதன பலவும் நாங்கள் அவர் பாடத்தின்மூலம் கண்டோம்'..ஜெயகாந்தனுக்குப் பிடித்த நண்பராகவும் விளங்கினார்!
ஆங்கில இலக்கியம் சேர்ந்து முதல்வருட முடிவில் ஜேவி இடம் சென்று பிழையற ஆங்கிலம் கற்க எனக்கு உதவிசெய்யக் கோரினேன்-நான் தமிழ் மீடியம் தான் பள்ளிகளில் பயின்றவன்.ஆங்கிலத்தில் நல்ல பரிச்சயம் இருந்தாலும் பேச கோர்வையாய் வராது.அவர் என் வீட்டுச் சூழல் பற்றிக் கேட்டுவிட்டு ,சில புத்தகங்கள் கொடுத்துவிட்டு-நாலுநாட்கள் கழித்து வரச் சொன்னார்.ஆங்கிலப்புத்தகம் புரியாதே என்றேன்."உன்னைப் படித்துவிட்டுவா என்றேன்"-என்றார்.சிரத்தையுடன் நாலுநாட்களில் அந்நூல்களைப் படித்துவிட்டு மீண்டும் சந்தித்தேன்அவரது வீட்டில்.அப்போதுஅவர் ராமமூர்த்தி தெரு-சொக்கிகுளத்தில் இருந்தார்.தேனீர் கொடுப்பார்-அன்புடன் பழகுவார்.மீண்டும் ஐந்தாறு நூல்களை படித்து வரச் சொன்னார்.அந்த 69 ஆம் வருடக் கோடையில் இருபதுநாவல்கள் படித்திருப்பேன்.இரண்டாம் ஆண்டு துவங்குகையில் வகுப்பில் என்னை எந்த நூல்கள் படித்தேன் என்று ஆங்கிலத்தில் பதிலளிக்கச் சொன்னார்.நான் ஊமை சிவாஜி சரஸ்வதி அருள்பெற்று பேச ஆரம்பித்ததுபோல் தங்கு தடையின்றிப் பேசலானேன்-என் ஆங்கிலத் தேர்ச்சி அவர் அளித்த கொடை! எத்தனையோ என்போன்ற மாணவர்களைப்பேச வைத்த -அந்தக் கால கோல்ட் மெடல் வாங்கிய கற்றுத்துறை போகிய பெரியார் அவர்.

நான் ஆசிரியர் மன்ற போராட்டங்களில் ஈடுபடுவதைக் கண்ணுற்று-ஓர் நாள் என்னிடம்-'என்ன நீ இன்குலாப் சிந்தாபாத்' என்று கோஷமிடுகிறாயே-இன்குலாப் என்றால் அர்த்தம் தெரியுமா '-என்றார். 'புரடசிக்கு அர்த்தமே நீங்கள் சொல்லிக்கொடுத்து வளர்ந்தேன்.இங்கே 'மாற்றம்'என்ற அளவிலேயே அதை பயன் படுத்துகிறேன்' -என்றேன்-புன்னகைத்தே சென்றுவிட்டார்.பிறிதொரு சமயம் அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தபின் சந்தித்தேன்-அவர் அதை பற்றிச் சொன்னவுடன்-நான் -உங்களுக்கு இதயம் வலது பக்கம் அல்லவா இருக்கிறது என்றே சொன்னதின் பொருளை உணர்ந்து புன்முறுவல் பூத்தார்.அவரை மன்னர் கல்லூரிக்கும் வரவழைத்து ஷேக்ஸ்பியரைப் பற்றி பேச வைத்து ஆசைதீரக் கேட்டோம்.பந்தா இல்லாத அறிவாளி, உள்ளதை உணர்த்தும் ஆற்றல் மிக்கவர், கார்ட்டூன் வரைவதிலும் இணையற்றவர்.ஒரு சகாப்தமே அவர்தம் வாழ்வு!Madurai O madurai

Comments

Popular posts from this blog