மரங்களிடையே பனிமழை பொழியும் மாலை வேளையில் நின்று .. .....ராபர்ட் பிரோஸ்ட்
எவருடைய காடு இது -எனக்குத் தெரியுமென்றெண்ணுகிறேன்
அவரது வீடு அந்த கிராமத்தில் இருக்கிறது
நான் இங்கு நின்றிருப்பதை அவரால் பார்க்க இயலாது
அவர் இடம் பூரா பனியில் மூடி இருப்பதை பார்க்கிறேன்
என் குதிரைக்கு கூட இது விநோதமாகத் தோன்றும்-
நான் பண்ணைவீட்டருகே நிற்காமல் இங்கே இருப்பது
இக்காட்டுக்கும் உறைபனிசூழ் ஏரிக்கும் இடையே -
இவ்வருடத்தின் மிகக் கரிய இம்மாலையில் இங்கிருப்பது
குதிரையோ தன் கழுத்துக் கயிற்று மணிகளை ஆட்டுகிறது-
ஏதேனும் தவறு நிகழ்ந்ததோ என்று கேட்பது போல்
வேறு வரும் ஒரே ஓசை காற்றின் ஓசையே
மெல்ல மெல்ல வருகிறது, கூடவே பொழியும் பனித்துகள்கள் !
இக்காடுகள்தான் அழகானவை ,கரியவை, அடர்த்தியானவை
நானுமே பலப்பல வாக்குறுதிகள் நிறைவேற்றவேண்டும்
இன்னும் செல்லவேண்டிய தொலைவோ அதிகம்-உறங்குமுன்
இன்னும் செல்லவேண்டிய தொலைவோ அதிகம்-உறங்குமுன்

From Robert Frost...

Comments

Popular posts from this blog