நான் இறப்பதற்காக நிறுத்தவில்லை
அவனே அன்புடன் நிறுத்தினான்
இவ்வண்டியில் நாங்களும் நிலையாமையும்
-மட்டுமே இருக்கிறோம்
மெல்லேவே பயணித்தோம்-அவனுக்கு வேகம் தெரியாது
எனது உழைப்பையும் ஓய்வையும் அவனது
பரிவுக்காகத் தொலைத்துவிட்டேன்
சிறார்கள் விளையாடும் பள்ளியைக் கடந்தோம்
அவர்கள் இன்னும் பாடங்களை முடிக்கவில்லை
தலையை விரித்துநிற்கும் நெல்மணிக்கதிர்களை
உடைய வயல்வெளிகளை கடந்தோம்
மறையும் சூரியனையும் தாண்டிச் சென்றோம்
ஈரமணித்துளிகளின் அணைப்பில் குளிரில் நடுங்கி-
மெல்லிய ஒற்றை ஆடையே அணிந்திருந்து-
சற்றே மேடேறிய வீட்டுமுன் நின்றோம்
கூரைகூட வேயாமலிருந்தது-அலங்காரமாயுமில்லை
பல நூற்றாண்டுகள் பறந்தனவோ-ஒவ்வொன்றும்
சிறியது ஒவ்வொரு நாட்களைவிடவும்-
அப்போதே வண்டியின் குதிரைகள் நிலையாமையைப்
பார்த்தவண்ணம் நின்றிருந்தன .
( In “Because I could not stop for Death—,” we see death personified. He is no frightening, or even intimidating, reaper, but rather a courteous and gentle guide, leading her to eternity. The speaker feels no fear when Death picks her up in his carriage, she just sees it as an act of kindness, as she was too busy to find time for him-(Study Guide).


கனவிலும் நான் பார்க்கவொண்ணா கண்கள்
இறப்பின் கனவு தேசத்தில்
இவைகள் அங்கே தோன்றவில்லை
இவைதாம் சூரியக்கதிர் துண்டுகளாய்
அங்கே மரமே ஊஞ்சலாடுகிறது
சொற்கள் காற்றின் இசையோடு
வெகுதொலைவில் புனிதமானதாக
மங்கி விடும் விண்மீன்களைப்போலே
இங்கே நான் வேண்டாம் அருகாமையில்
இறப்பின் கனவு தேசத்தில்
வெளிப்படையான வேஷங்கள்
களைகிறேன்-எலியின் ஆடை ,
காக்கையின் தோல், மாறுபட்ட
தடிகளாய் வயல் வெளியில்
காற்று ஊசலாடுகிறது எங்கோ
அது இறுதிச் சந்திப்பன்று
அந்திமயங்கும் தேசத்தில்
W. B. Yeats.

Comments

Popular posts from this blog