முன்பொரு காலத்தில் வயல்வெளி தோப்பு,ஓடை
பூமி,மற்றும் ஒவொரு காட்சியும் சொர்க்க ஒளியை
ஆடையாய் அணிந்திருந்தது எனக்குத் தெரிந்தன
மகத்துவமும் புத்துணர்வும் மிகுந்த கனவு.
அன்றுபோல் இன்றில்லையே -
எங்கெங்கு காணினும் ,
இரவோ பகலோ
இப்போது நான் பார்ப்பது இனிவரும் காலத்தில் காணவே முடியாது
வானவில் வருகிறது போகிறது
என்ன அழகு இந்த ரோஜா:
நிலாதான் எத்தகைய உவகையுடன்
சுற்றுமுற்றும் பார்க்கிறது வானம் வெறுமையிலிருக்கையில்
விண்மீன்களோடு விளங்கும் இந்த இரவில்தான்
தண்ணீர்தான் என்ன அழகு-என்ன வனப்பு
காலையில் சூரிய ஒளியின் பிறப்பே அற்புதம்
ஆயினும் பூமியினின்று பரவசநிலை பறந்ததே!
பறவைகள் மகிழ்ச்சியில் இப்போது பாடும்
ஆட்டுக்குட்டிகள் தமுக்கடிக்கும் ஓசையில்
கட்டுண்டு கிடக்கும்-
எனக்குமட்டும் ஏனோ துயர எண்ணம் வந்தது;
ஆயினும் பொழுதோடு அவ்வெண்ணம் தொலைந்தது-
மீண்டும் நான் வலிமையானவன் ஆனேன்-
மலை முகட்டினின்று வீழ்ச்சிநீர் விழுகின்றன என்துக்கம் இக்காலநிலையில் நிற்காது !
மலைகளின் ஓசைகள் எதிரொலியாய்க் கூடுகின்றன
உறங்கும் வெளியிலிருந்து காற்று என்னிடம் வருகிறது
இந்த பூமியே களைத்து மகிழ்கிறது
நிலமும் கடலும்
குதூகலத்துக்கு இடம் கொடுத்தன
மே மாத நடுவில்
எல்லா இதயங்களும் ஓய்வில் -
பேருவகையின் குழந்தையே-
என்னைச்சுற்றி ஒளி எழுப்பி வா
நான் அதைக்கேட்டிடுவேன் -
மகிச்சிமிகு மேய்க்கும் பையா!
ஆசிர்வதிக்கப்பட்ட மிருகங்கள்-பட்சிகளே-
ஒருவருக்கொருவர் ஒலிப்பதைக்கேட்கிறேன்
சொர்க்கமே உங்கள் மகிழ்ச்சியில் சிரிக்கின்றது
எனது இதயமோ உமது கொண்டாட்டத்தில் -
எனது தலையில் கிரீடம் சூடியதுபோல் -
உம் முழுமையான மகிழ்ச்சியை நான் உணர்கிறேன்
கேடு விளைவிக்கும் நாளே-நான் மட்டும் வருந்துவனோ-
இவ்வுலகம் இம் மே மாத ஒளியை அணிந்திருக்கிறது
பள்ளத்தாக்குகள் எங்கணும் குழந்தைகள் கூடிமலர்கள் பறிக்க
ஆதவன் அப்போது மிகுந்த அழகுடன் ஒளிர்கிறான்
அந்தக் குழந்தை எப்படி அம்மாவின் கரங்களுக்குத் தாவுகிறது
கேட்கிறேன் கேட்கிறேன் மகிழ்ச்சியோடு கேட்கிறேன்
ஆனால் ஒருமரம்-பலவற்றில் ஒன்று-தனி இடத்தில் நிற்கிறது
நான் பார்க்கிறேன்-இரண்டுமே-மரமும் இடமும்- சென்றுவிட்ட
காலத்தையேதான் சொல்லிக்கொண்டிருக்கின்றன
காலடியில்கிடக்கும் அதே கதையைத்தான் திரும்பச் சொல்லும்
எங்கே சென்றது மினுமினுப்பான உண்மையற்ற தோற்றம்?
எங்கே இருக்கிறது அம்மகத்துவக் கனவு?
நம் பிறப்புமே ஓர் உறக்கம்போலும் -மறக்கக்கூடியது -
உடன் வருமே உயர்ந்த ஆன்மா -நம் வாழ்வின் விண்மீன்-
தனது இருப்பை எங்கேயிருந்து துவக்கியதோ
எவ்வளவு தொலைவிலிருந்து வருகிறதோ-
முழுவதுமான அறியாமையிலும் இல்லை
முழுவதுமான நிர்வாண நிலையிலும் இல்லை -
ஆனால் தொடர்ச்சியாக வரும் மகத்துவத்தில் வருகிறோம்
ஆண்டவனிடமிருந்து-அவரே நம் இல்லம்
அதனாலன்றோ விண்ணகம் குழந்தைப்பருவத்தில் தெரிந்தது-
உலக வாழ்க்கையின் -சிறைக்கொப்ப-நிழல்கள் மறைந்துவிட்டன
வளர்ந்துவரும் மனிதன் பள்ளிப்பருவத்தில் ஒளியைக் காண்கிறான்
வரும் வழியில் அனுபவிக்கும் இன்பத்தில் அதுபுரியும்
கீழ்திசையிலிருந்து விலகிப் பயணிக்கும் இளைஞன் இன்னும்
இயற்கையின் தூதன்தான்-வழியெல்லாம் ஒளியின் பார்வையில்-
முழு மனிதனாகும்போதே உணர்கிறான்-காட்சி இன்பம் மங்கி
அவனது ஒளிமிகுக் காலம் வனப்பை இழப்பதை-அது இயற்கையே
பூமியோ தனது மடியைத்தன் அழகால் நிரப்புகிறது
தனது இயல்புக்கு ஏற்ப அதற்கும் ஆசைகள் உள்ளன
ஓர் அன்னையின் மனதோடு அது ஒத்துப்போகிறது-
தகுதியற்ற குறிக்கோள் ஏதும் இல்லை அது-
செவிலித்தாய்போல் மைந்தன் என்ற வளர்ப்புமகவை
அவளது உற்ற தோழனை-அவனது மகத்துவம் மறக்கடிக்கச் செய்யும் ;
அவன் புறப்பட்டுவந்த அரசகுல அரண்மனையும் மறப்பானே!-!
.......
to continue.
Based on Wordsworth's Ode on Intimations of Immortality.

Comments

Popular posts from this blog