அதோ சுவரில் ஓவியமாய் நிற்பவள்தான்
என் முந்தைய சீமாட்டி -
உயிரோடு இருப்பதுபோலில்லை?
அற்புதமான படைப்பு-பிரா பண்டாலின்
கரங்கள் ஒருநாள் முழுவதும் கடுமையாய்
உழைத்தன-அவள் நிற்கிறாள்-
இங்கே அமர்ந்து அதைக் கவனி-
திட்டமிட்டே அந்த ஓவியனை வரச்செய்தேன்:
அம்முகத்தின் அழகை உன்னைப்போன்றோர்
புரிவது இயலாது-அவனால் மட்டுமே முடியும்-
அந்தமுகத்தின் ஆழத்தையும் அதீத உணர்ச்சிகளையும்
அவனாலேயே கொணர்ந்திடல் கூடும்-
என்னைப்போன்ற சீமானின் அண்மையாலே அந்த உணர்ச்சி
அவளால் கொடுக்கமுடியும்-அல்லது ஓவியரே அவளணிந்த ஆடையைத்
திருத்தச் சொன்ன வெட்கத்திலோ-அல்லது அவள் அழகைப் புகழ்ந்ததாலோ-
"வண்ணமெல்லாம் உன் ஏழிலைக் காட்டுவது கடினமென்று"சொல்லியிருப்பார்-
அதுவே அவள் கன்னத்தின் சிவப்பைக் கூட்டியிருக்கலாம்!
அவளுக்கு இருந்த இதயம்--என்ன சொல்வேன் அதுகுறித்து?
எளிதில் மகிழ்ச்சிவயப்படும், விரைவில் த்ருப்தியுறும்-
அவள் பார்த்திருப்பாள்-அவள் பார்வை எங்கணுமிருக்கும்-
அந்திமயங்கி வெளிச்சம் மேற்கே குன்றுகையில் ,
கொத்தாக செரிப்பழத்தை தோட்டத்தில் புகுந்து
தன் விவாசத்தைக் காட்டும் ஒருவேலையாளிடமும்
அவள் சவாரி செய்யும் வெள்ளைக் கோவேறுக்கழுதையுடனும்-
அவளுடைய ஆமோதிக்கும் சொற்களைச்சொல்லவைக்கும்-
அல்லது வெட்கத்தை அவளிடம் காணவைக்கும்-எது எப்படியோ-
எனது பரிசான தொள்ளாயிரம் ஆண்டுகள் பாரம்பரியத்தையும்
பிறிதோர் பரிசையும் எப்படி அவள் ஒன்றாகப் பார்க்கலாம்?-
எவர் குனிந்து இத்தகைய சிறிய செய்கைகளுக்குமுன் தலை குனிவார்?
அனைவர்க்கும் நன்றி சொல்வாள்-நல்லது-யாருக்குதரம் தாழ்ந்திடும்
அவளது இத்தகையைச் செயல்களை குறை சொல்ல?
அவளைத் திருத்தும் அளவிற்கு என்னிடம் திறமை இல்லை-
தனது செயலுக்கு அவள் வருந்தினாளா. என்ன?-
எப்படியெல்லாம் அவள் குறைகளை சுட்டிக் காட்டினாளா?
அப்படியே இறங்கிவந்து அவள் குறைப்பாட்டைச் சுட்டிக்காட்டினாலும்
அப்படியே சிரித்துவிடுவாள்-வேறு எவர் சொல்லியிருந்தாலும்-
இது வளர்ந்தது- நான் கட்டளை பிறப்பித்தேன் -அவள் சிரிக்கவேகூடாதென-அவள் சிரிப்பது அடங்கியது.
அதோ அங்கேஉயிரோடிருப்பதுபோல் ஓவியமாய் நிற்கிறாள்!
சற்றே-எழுந்துவா-கீழே செல்வோம்-நமக்காகக் காத்திருப்பார்
உன் பிரபுவின் செல்வமும் அவரது ஈகைக்குணமும் நன்கு தெரியும்-
ஆயினும் நான் எதிர்பார்ப்பது அவளது மகளையே!,-வரதட்சணை அல்ல!
இந்த ஓவியத்தைப் பார்-நெப்டியூன் எப்படி கடல்குதிரையை அடக்குகிறது!
இன்ஸ்ப்ருக்கின் க்ளாஸ் வரைந்த ஓவியம் இது!
Based on Robert Browning's My last Duchess.
The poem is set during the late Italian Renaissance. The speaker (presumably the Duke of Ferrara) is giving the emissary of the family of his prospective new wife (presumably a third or fourth since Browning could have easily written 'second' but did not do so) a tour of the artworks in his home. He draws a curtain to reveal a painting of a woman, explaining that it is a portrait of his late wife; he invites his guest to sit and look at the painting. As they look at the portrait of the late Duchess, the Duke describes her happy, cheerful and flirtatious nature, which had displeased him. He says, "She had a heart – how shall I say? – too soon made glad..." He goes on to say that his complaint of her was that "'twas not her husband's presence only" that made her happy. Eventually, "I gave commands; then all smiles stopped together." This could be interpreted as either the Duke had given commands to the Duchess to stop smiling or commands for her to be killed. He now keeps her painting hidden behind a curtain that only he is allowed to draw back, meaning that now she only smiles for him.--WIKI.

Comments

Popular posts from this blog