அதோ அவளைப் பார்-ஒற்றையாக வயல்காட்டில்-
தன்னந் தனியே பணிபுரியும் மேட்டுநில மங்கை-
அறுவடை செய்துகொண்டு -தனக்குளே பாடிக்கொண்டும் !
சற்றேபொறு-அன்றி மெல்ல மெல்ல நடக்கலாம்
ஒரு ஆளாகவே கதிரறுத்தும்-கட்டி வைத்தும்
சோகப்பாட்டு ஒன்றை ஏகாந்தமாய்ப் பாடியும்!
ஓ கவனி-இவ்வகன்ற பள்ளத்தாக்கு முழுவதும்
அவளது பாட்டுதான் நிரம்பி வழிகிறதே!
அராபியப் பாலைவனத்தின் நிழல் தரும்சோலைகளில்
தங்கவரும் பயணியரிடை இப்படி ஓர் பாட்டை
எந்த ஒரு இரவுப் பறவையும் இசைத்திருக்குமா?
உலுக்கவைக்கும் இக்குரலினிமைபோல் -
ஹெப்ராய்ட்ஸ் தொலைத்தீவுகள் கடலோசையை விஞ்சி -
வசந்த காலத்திலும் எந்தக் குயிலும்
கூடப் பாடியிருக்க இயலாது!
எவரேனும் சொல்லமுடியுமா என்ன அந்தப்பாட்டு என?
கடந்தகால பழமையான நிகழ்வுகளா?
யுத்தங்களா--அவளது துன்பகீதம் ?
இன்றும்கூட நடக்கும் நமக்குத் தெரிந்த
சங்கதிகளை சிறு பாட்டாக இசைக்கிறாளோ?
ஏதேனும் இயற்கைப்பேரிடரோ-துன்பமோ,வலியோ?
ஒருகாலத்தில் நடந்ததோ-மீண்டும் நடக்க இருப்பதோ?
என்ன கருப்பொருளோ-அக்கன்னியின் பாட்டில்?
அவள் பாடப் பாட முடிவற்றே ஒலித்தது-
பணியினிடையும் கதிரறுக்கையிலும்
பாடிய அவள் பாட்டில் அசையா சிலையாய் நின்றேன்-
மீண்டும் மலைமீதேறி நடந்திடும்போதும்
நெஞ்சமெல்லாம் படர்ந்தது அவ்வினிய இசை-
வெகு காலம் ஒலித்து ஒலித்தும் ஓயவில்லை!
Based on The Solitary Reaper by William Wordsworth.

Comments

Popular posts from this blog