ஏறக்குறைய 40 ஆண்டுகள் மதுரையில் வாழ்ந்தது --இன்னும் அங்கே வசிப்பதுபோல் இருக்கிறது.'மதுரையைச் சுற்றிய கழுதையும் போகாது' என்பது ஏதோ பொறாமைபிடித்த ஜீவன் சொன்னது. 'குதிரை' என்றுதான் அது இருக்கவேண்டும்.எந்தஊரிலும் சிறப்புகள் உண்டு-மனம் பக்குவப் பட்டுவிட்டால். மதுரையில் ஆலய தரிசனங்கள் பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.சற்றே வித்தியாசமாக-- நான் படித்த சில நூல்களும் என்னைச் சுற்றிய மதுரைக் காட்சிகளுடன் விவரிக்க எண்ணுகிறேன். மனம் விசித்திரமானதே. திரைப்படமாக பலவும். பின்னணி இசையோடு சிலவும் எல்லாநேரங்களிலும் மனம் விளையாடிக் கொண்டே இருக்கிறது.ரமண மகரிஷி குறிப்பிட்டதுபோல் -"நடராஜப் பெருமானது தூக்கியாடும் திருவடிக் கருணைச் சிறப்பின் தத்துவமானது தமது அடியார்களை ஆன்ம விசாரமாகிய நடனத்தின் மூலமாக இதயம் அடையும்படிக் கொஞ்சி விளையாடும் அருளாட்டமே ஆகும்".எனது தந்தையாரின் நீண்ட நாள் நண்பர் ஒருவரது புதல்வர் பரிக்ஷை எழுத மதுரைக்கு வந்திருந்தார்.அவர் பார்வையற்றவர்.ஆறு நாட்கள் மதுரைக் கல்லூரிக்கு அவரை எக்ஸாம் எழுதவும் திரும்பிக் கூட்டி வரும் பணி எனக்குக் கிடைத்தது.அப்போதுதான் ஆங்கில
கடவுள் மர்மமான வழிகளில் நடக்கிறார் தனது அற்புதங்களை நிகழ்த்தவே தனது காலடிகளைக் கடலின்மீது பதிக்கிறார் பெரும் புயலின்மீதும் சவாரி செய்கிறார் அளக்கமுடியா சுரங்கங்களின் அடியினில் ஆழ்ந்து தோற்கவே முடியா தனது தேர்ச்சிபெற்ற திறனுடன் தனது ஒளிமிகுத் திட்டங்களை சேமிக்கும் வல்லவர் தன் ஊடுருவமுடியா சங்கல்பத்தை முடிக்கிறார் கடவுளுக்கு பயப்படும் முனிவர்காள், புதுதைரியம் பெறுக நீவிர் நடுங்கும் மேகமெல்லாம் உண்மையில் அவர்கருணை பெற்றதே,அதுவுமன்றி அவர்தாம் அவைகளை உன்தலைமீது விழும் ஆசிகளாய் மாற்றுவார் மதிப்பிடாதீர் ப்ரபுவைத் தங்கள் பலவீனமான குணத்துடன் நம்புங்கள் அவரை அவரது கருணைக்காக முறைத்துப்பார்ப்பதுபோல் இருக்கும் மகா சக்தி அவர் மறைத்துள்ளார் தனது சிரிக்கும் முகத்தை அவர்தம் குறிக்கோள் விரைவில் பலன் தரும் ஒவ்வொருமணித்துளியிலும் வெளிப்படும் மொட்டாக இருப்பது கசப்பாகத்தெரியும் ஆனால் இனிமையானதுதான் எந்த மலரும் கண்மூடித்தன நம்பிக்கை தவறுக்கு இடமாகும் அவர்தம் செயலை ஆராய்வது வீணானது கடவுளே அவரது பொருளை விளங்குபவர் அது என்றென்றும் எளிமை மட்டும் உடையது Based on William C
Comments
Post a Comment