- நேரு ஆலால சுந்தர விநாயகர்...
- எழில்மிகு மதுரையில் வடக்குமாசி-மேற்குமாசி சந்திப்பில் அருள்பாலிக்கிறவரே நம் நேரு ஆலால சுந்தர விநாயகர் .எத்தனையோ கூட்டங்களை பார்த்த இடம் அது.மகத்தான சிந்தனையாளர்களை , பேச்சாளர்களை ,பட்டிமன்றங்களை தலைவர்களை ஆயிரக்கணக்கானவர்களைக் கட்டிப் போட்ட இடம் அது-ஏன் அதற்கு 'நேரு' பெயரும் வந்தது ?ஒருவேளை நேரு அவ்வழியில் செல்லும்போது கோவிலில் நிறுத்தி அவருக்குப் பிள்ளையாரின் துண்ணுறு கொடுத்திருக்கலாம்-அவரும்-ஒரு மரியாதைநிமித்தம் வாங்கிக்கொண்டிருக்கலாம்-அவருக்க...ுத்தான் 'பக்தி'எல்லாம் கிடையாதே.வருவோரும் போவோரும் ஜேஜே என்று காட்சி அளிக்கும் இடமே இது.பெரிய தேர் ஆண்டுக்கு ஒருமுறை வரும் -அப்போது பார்க்க வேண்டுமே கூட்டத்தை-பிளக்கும் வெயிலில் -ஆலவாய் அழகனுக்கும் அங்கயர்க் கண்ணிக்கும் வாழ்த்தொலிகள் எழுப்பி கூட்டத்தில் தேர் வரும் சமயம் உள்ளமே அதிருமே..அழகிய மதுரையின் அசத்தும் கன்னியரும் காளையரும் கண்களால் கதைபேசும் காவிய நிகழ்ச்சிகளும் அங்கே நிறைவேறும்!பல்லாயிரக்கணக்கான உழைக்கும் வர்க்கத்து வீரர்கள் கூடி உரிமைக்குரல் எழுப்பிய உன்னத இடம் இது ஆனால் எந்த நேரத்திலும் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாது -அந்த நேரு விநாயகரே சாட்சி! கூட்டங்கள் நடக்கும்போது மதுரைக் காரர்களுக்கு சுண்டலும் அப்பமும் கடலையும் சளைக்காமல் விற்று அவர்கள் பசியைப் போக்கும் விற்பனையாளர்கள் என்ன-கோடையில் நீர்மோர் கொடுத்து தாகம் தீர்க்கும் நல்ல உள்ளங்கள் என்ன, அக்காலத்தில் எம்ஜியார் சிவாஜி போன்ற வர்களை வைத்துப் பெருங்கூட்டங்கள் காட்டிய விசிறிகள் சங்க அடியார்கள் தியாகம் என்ன ?-இப்படி மேல மாசி வடக்கு மாசி சந்திப்பைச் சொல்லிக் கொண்டே போகலாம்.இப்போதெல்லாம் அத்தகைய கூட்டங்கள் நடக்கிறதா என மதுரைக்கார நண்பர்கள்தான் சொல்லவேண்டும்.அப்போதெல்லாம் அருகில் சிறிய பரோட்டா , இட்லிக்கடைகளும் மணம் பரப்பி பசிபோக்கும் இடமாக இருந்தது.நிற்க நேரமோ இடமோ இல்லாத சூழ்நிலைமை அந்த இடத்திற்கு இப்போதும் உள்ளதே அதன் பரபரப்பான தன்மைக்கு சான்று. மதுரை மதுரை தான்!
நான் சிறுவனாய் இருந்த காலத்திலிருந்தே கலெக்டர்'ஸ் ஆபிஸ் டு திருப்பரங்குன்றம் பஸ்ஸில் ஏறி முருகப்பெருமானைத் தரிசித்து வந்திருக்கிறேன்.பின்னாளில் மூட்டா தோட்டத்திலுருந்தபோது பல நாட்கள் சென்று முருகன் அருளைப்பெற விழைந்திருக்கிறேன்.பெரிய ' ஓ 'வடிவத்தில், வெண்ணீறணிந்து தூரத்திலிருந்து பார்க்கையிலே கூட மனம் கவரும் மருகன் அவன்.இன்னும் சொல்லவேண்டுமானால் நாற்பத்து எட்டு நாட்கள் மலையைச் சுற்றி வந்துதான் மூட்டா தோட்டத்து இடமே எங்களுக்கு கிடைத்தது.கோவினுள் நுழையும்போது கருப்பண்ண சாமியை க ும்பிட்டுவிட்டு -விநாயகரை வணங்கி-நெடிய இரண்டாம் கட்ட நிலையைக் கடந்து மேலே சென்று பரந்துபட்ட நிலைக்கு வருவோம். இடதுபுறம் கோயில் குளத்தில் இறங்கி, உப்பு,மிளகு, வெல்லம் பொட்டலங்கள் வாங்கி தோஷ நிவர்த்தி செய்துவிட்டு,.அடுத்த கட்ட நிலைக்கு பல படிகள் ஏறி வந்து-கொடிமரத்தின்முன் விழுந்து வணங்கி பிரார்த்தனை செய்வோம்.கூட்டமில்லாப்பொழுதில் மிகப் பேரமைதியை நாம் அங்கெ உணரமுடியும்.இன்னும் மேலே சென்றால் -வலதுபுறம் கோவர்தனாம்பிகையை வணங்கிவிட்டு-மெயின் சன்னதிக்கு ஏறி வருகிறோம்.ஐந்து அற்புத மூலவர் விக்ரகங்களை ஒன்றன் ...
Comments
Post a Comment