- நேரு ஆலால சுந்தர விநாயகர்...
- எழில்மிகு மதுரையில் வடக்குமாசி-மேற்குமாசி சந்திப்பில் அருள்பாலிக்கிறவரே நம் நேரு ஆலால சுந்தர விநாயகர் .எத்தனையோ கூட்டங்களை பார்த்த இடம் அது.மகத்தான சிந்தனையாளர்களை , பேச்சாளர்களை ,பட்டிமன்றங்களை தலைவர்களை ஆயிரக்கணக்கானவர்களைக் கட்டிப் போட்ட இடம் அது-ஏன் அதற்கு 'நேரு' பெயரும் வந்தது ?ஒருவேளை நேரு அவ்வழியில் செல்லும்போது கோவிலில் நிறுத்தி அவருக்குப் பிள்ளையாரின் துண்ணுறு கொடுத்திருக்கலாம்-அவரும்-ஒரு மரியாதைநிமித்தம் வாங்கிக்கொண்டிருக்கலாம்-அவருக்க...ுத்தான் 'பக்தி'எல்லாம் கிடையாதே.வருவோரும் போவோரும் ஜேஜே என்று காட்சி அளிக்கும் இடமே இது.பெரிய தேர் ஆண்டுக்கு ஒருமுறை வரும் -அப்போது பார்க்க வேண்டுமே கூட்டத்தை-பிளக்கும் வெயிலில் -ஆலவாய் அழகனுக்கும் அங்கயர்க் கண்ணிக்கும் வாழ்த்தொலிகள் எழுப்பி கூட்டத்தில் தேர் வரும் சமயம் உள்ளமே அதிருமே..அழகிய மதுரையின் அசத்தும் கன்னியரும் காளையரும் கண்களால் கதைபேசும் காவிய நிகழ்ச்சிகளும் அங்கே நிறைவேறும்!பல்லாயிரக்கணக்கான உழைக்கும் வர்க்கத்து வீரர்கள் கூடி உரிமைக்குரல் எழுப்பிய உன்னத இடம் இது ஆனால் எந்த நேரத்திலும் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாது -அந்த நேரு விநாயகரே சாட்சி! கூட்டங்கள் நடக்கும்போது மதுரைக் காரர்களுக்கு சுண்டலும் அப்பமும் கடலையும் சளைக்காமல் விற்று அவர்கள் பசியைப் போக்கும் விற்பனையாளர்கள் என்ன-கோடையில் நீர்மோர் கொடுத்து தாகம் தீர்க்கும் நல்ல உள்ளங்கள் என்ன, அக்காலத்தில் எம்ஜியார் சிவாஜி போன்ற வர்களை வைத்துப் பெருங்கூட்டங்கள் காட்டிய விசிறிகள் சங்க அடியார்கள் தியாகம் என்ன ?-இப்படி மேல மாசி வடக்கு மாசி சந்திப்பைச் சொல்லிக் கொண்டே போகலாம்.இப்போதெல்லாம் அத்தகைய கூட்டங்கள் நடக்கிறதா என மதுரைக்கார நண்பர்கள்தான் சொல்லவேண்டும்.அப்போதெல்லாம் அருகில் சிறிய பரோட்டா , இட்லிக்கடைகளும் மணம் பரப்பி பசிபோக்கும் இடமாக இருந்தது.நிற்க நேரமோ இடமோ இல்லாத சூழ்நிலைமை அந்த இடத்திற்கு இப்போதும் உள்ளதே அதன் பரபரப்பான தன்மைக்கு சான்று. மதுரை மதுரை தான்!
கடவுள் மர்மமான வழிகளில் நடக்கிறார் தனது அற்புதங்களை நிகழ்த்தவே தனது காலடிகளைக் கடலின்மீது பதிக்கிறார் பெரும் புயலின்மீதும் சவாரி செய்கிறார் அளக்கமுடியா சுரங்கங்களின் அடியினில் ஆழ்ந்து தோற்கவே முடியா தனது தேர்ச்சிபெற்ற திறனுடன் தனது ஒளிமிகுத் திட்டங்களை சேமிக்கும் வல்லவர் தன் ஊடுருவமுடியா சங்கல்பத்தை முடிக்கிறார் கடவுளுக்கு பயப்படும் முனிவர்காள், புதுதைரியம் பெறுக நீவிர் நடுங்கும் மேகமெல்லாம் உண்மையில் அவர்கருணை பெற்றதே,அதுவுமன்றி அவர்தாம் அவைகளை உன்தலைமீது விழும் ஆசிகளாய் மாற்றுவார் மதிப்பிடாதீர் ப்ரபுவைத் தங்கள் பலவீனமான குணத்துடன் நம்புங்கள் அவரை அவரது கருணைக்காக முறைத்துப்பார்ப்பதுபோல் இருக்கும் மகா சக்தி அவர் மறைத்துள்ளார் தனது சிரிக்கும் முகத்தை அவர்தம் குறிக்கோள் விரைவில் பலன் தரும் ஒவ்வொருமணித்துளியிலும் வெளிப்படும் மொட்டாக இருப்பது கசப்பாகத்தெரியும் ஆனால் இனிமையானதுதான் எந்த மலரும் கண்மூடித்தன நம்பிக்கை தவறுக்கு இடமாகும் அவர்தம் செயலை ஆராய்வது வீணானது கடவுளே அவரது பொருளை விளங்குபவர் அது என்றென்றும் எளிமை மட்டும் உடையது Based on William C...
Comments
Post a Comment