காட்டுக்குத் துரத்தி அடிக்கப்பட்டு என்னோடு வாழும் தோழர்களே-சகோதரரே-இவ்வரிய காட்டு வாழ்க்கை நம் அரசபோக படாடோப வாழ்க்கையைவிட இனிமையாக இருக்கிறது அல்லவா?இம்மரங்களிடம் ஏது அரசவை காழ்ப்புணர்ச்சிகளும் ,சதித்திட்டங்களும்?இக்காட்டிடை நாம் பருவ மாற்றங்களை நன்கு உணர்கிறோம்-நம்மை அவை பாதிப்பதில்லை.பனிக்கட்டிப் பொழிவுகள் , உறுத்தும் காற்றின் கடிகள் -அடிகள் என் மீது விழுந்தாலும்-என் உடல் குளிரில் நடுங்கினாலும...், என்னால் கால நிலையின் இயக்கத்தைப் பாராட்டமுடிகிறது.சிரித்தவாறே என் சிந்தனை இப்படிச் செல்கிறது: நன்றி உரித்தாகுக-நல்ல காற்றுக்கு-என்னை அவை துதித்துப் பாடாது;எனக்கு அறிவுரைகூறி என்னையே உணரவைக்கும் நல்லாசிரியன் போன்று;தீமைமிகு காலமும்கூட நன்மையையும் பயக்கும்-எப்படி கோரவடிவமுள்ள தேரை தன் தலையில் ஒளிவீசும் கற்களைக் கொண்டுள்ளதோ-அதுபோல்!இவ்வரிய வாழ்க்கை-நாகரிக உலகினின்று வெகு தொலைவில் இருந்தாலும்-இம்மரங்களின் மொழியைக் கேட்கமுடிகிறது,ஓடிவரும் ஓடைகளில் நூல்வரிகளைப் படிக்கமுடிகிறது,பாறைகள் பகர்ந்திடும் ஞானச் சொற்களை செவிமடுக்கமுடிகிறது-மேலும் நல்லன எல்லாம் காட்டும் அனைத்துப் பொருட்களையும் கண்டுகொள்ளமுடிகிறது".--அஸ் யு லைக் இட்.(ஷேக்ஸ்பியர் )-ஆக்ட் ஒன்று-காட்சி ஒன்று.
BASED ON -ELEGY WRITTEN IN A COUNTRY CHURCHYARD BY THOMAS GRAY முடிகின்ற நாளை அறிவித்து மணி ஒலி எழுப்பியது மேய்ச்சலை முடித்தே கத்தும் ஆவினம் திரும்பின ஏர் உழவர் தம் இல்லம் நோக்கி களைப்புடன் வந்தனர் இருட்டும் உலகமும் என்...னிடம் இப்போது மிஞ்சியது பார்வையிலிருந்து ஒளிர்ந்த காட்சி மெல்ல மறைகிறது எங்கெங்கும் காற்றில் நிரம்பிநின்றது அருள் பேரமைதி தட்டாம்பூச்சியின் கூச்சல்களும் பறத்தலுமே எஞ்சியது மயக்க நிலையே தாலாட்டுது தொலைதூரக் காட்சிகளை ஐவிகொடிபடர்ந்த அந்த ஆலயக்கோபுரஉச்சியில் மட்டும் முணுமுணுத்த ஆந்தை ஒன்று நிலவுக்குப் புகார் செய்தது ஏதோ அதன் ரஹஸ்ய அறையினுள் அத்துமீறியதாம் அதன் அக்காலம்தொட்டுவரும் வீட்டில் கேடு வந்துற்றதாம் அந்தக் கரடுமுரடான எல்ம்ஸ் மரங்கள் கீழ் , யூமர நிழலில் புற்கள் படர்ந்த மண் மேடு மேடாய்க் குவிந்து இருந்தன ஒவ்வொருவரும் தத்தம் இடத்தில் வெகுகாலமாக இருந்தனர் எம் முன்னோர்கள்தாம்-ஊர்நாட்டார் -எம் குடிலிலிருந்து சென்றார் நறுமணம்பரப்பும் இனிய காலைத் தென்றல் காற்று வைக்கோல் கூடுகளிலிருந்து ஒலியெழுப்பும் ஸ்வால்லோ சேவல்களின் கொக்கரக்கோ மற்றும் ...
Comments
Post a Comment