BASED ON -ELEGY WRITTEN IN A COUNTRY CHURCHYARD BY THOMAS GRAY முடிகின்ற நாளை அறிவித்து மணி ஒலி எழுப்பியது மேய்ச்சலை முடித்தே கத்தும் ஆவினம் திரும்பின ஏர் உழவர் தம் இல்லம் நோக்கி களைப்புடன் வந்தனர் இருட்டும் உலகமும் என்...னிடம் இப்போது மிஞ்சியது பார்வையிலிருந்து ஒளிர்ந்த காட்சி மெல்ல மறைகிறது எங்கெங்கும் காற்றில் நிரம்பிநின்றது அருள் பேரமைதி தட்டாம்பூச்சியின் கூச்சல்களும் பறத்தலுமே எஞ்சியது மயக்க நிலையே தாலாட்டுது தொலைதூரக் காட்சிகளை ஐவிகொடிபடர்ந்த அந்த ஆலயக்கோபுரஉச்சியில் மட்டும் முணுமுணுத்த ஆந்தை ஒன்று நிலவுக்குப் புகார் செய்தது ஏதோ அதன் ரஹஸ்ய அறையினுள் அத்துமீறியதாம் அதன் அக்காலம்தொட்டுவரும் வீட்டில் கேடு வந்துற்றதாம் அந்தக் கரடுமுரடான எல்ம்ஸ் மரங்கள் கீழ் , யூமர நிழலில் புற்கள் படர்ந்த மண் மேடு மேடாய்க் குவிந்து இருந்தன ஒவ்வொருவரும் தத்தம் இடத்தில் வெகுகாலமாக இருந்தனர் எம் முன்னோர்கள்தாம்-ஊர்நாட்டார் -எம் குடிலிலிருந்து சென்றார் நறுமணம்பரப்பும் இனிய காலைத் தென்றல் காற்று வைக்கோல் கூடுகளிலிருந்து ஒலியெழுப்பும் ஸ்வால்லோ சேவல்களின் கொக்கரக்கோ மற்றும் ...
Popular posts from this blog
நான் சிறுவனாய் இருந்த காலத்திலிருந்தே கலெக்டர்'ஸ் ஆபிஸ் டு திருப்பரங்குன்றம் பஸ்ஸில் ஏறி முருகப்பெருமானைத் தரிசித்து வந்திருக்கிறேன்.பின்னாளில் மூட்டா தோட்டத்திலுருந்தபோது பல நாட்கள் சென்று முருகன் அருளைப்பெற விழைந்திருக்கிறேன்.பெரிய ' ஓ 'வடிவத்தில், வெண்ணீறணிந்து தூரத்திலிருந்து பார்க்கையிலே கூட மனம் கவரும் மருகன் அவன்.இன்னும் சொல்லவேண்டுமானால் நாற்பத்து எட்டு நாட்கள் மலையைச் சுற்றி வந்துதான் மூட்டா தோட்டத்து இடமே எங்களுக்கு கிடைத்தது.கோவினுள் நுழையும்போது கருப்பண்ண சாமியை க ும்பிட்டுவிட்டு -விநாயகரை வணங்கி-நெடிய இரண்டாம் கட்ட நிலையைக் கடந்து மேலே சென்று பரந்துபட்ட நிலைக்கு வருவோம். இடதுபுறம் கோயில் குளத்தில் இறங்கி, உப்பு,மிளகு, வெல்லம் பொட்டலங்கள் வாங்கி தோஷ நிவர்த்தி செய்துவிட்டு,.அடுத்த கட்ட நிலைக்கு பல படிகள் ஏறி வந்து-கொடிமரத்தின்முன் விழுந்து வணங்கி பிரார்த்தனை செய்வோம்.கூட்டமில்லாப்பொழுதில் மிகப் பேரமைதியை நாம் அங்கெ உணரமுடியும்.இன்னும் மேலே சென்றால் -வலதுபுறம் கோவர்தனாம்பிகையை வணங்கிவிட்டு-மெயின் சன்னதிக்கு ஏறி வருகிறோம்.ஐந்து அற்புத மூலவர் விக்ரகங்களை ஒன்றன் ...
உன்னோடு நின்றவர்கள் தலையைத் தொங்கவிட்டு ,அனைத்திற்கும் உன்னையே காரணமாக்கும்போது உன்னால் தலை நிமிர்ந்து நிற்க முடியுமானால் அனைவரும் உன்னைச் சந்தேகிக்கையில் உன்னால் உன்னைநம்பமுடியுமானால் அதே சமயம் அவர்கள் அவநம்பிக்கையையும் சற்றே புரிய முடியுமானால் உன்னால் காத்திருக்கமுடிந்து அதனால் களைப்படைய முடியாமல் இருந்தால் உன்னைப் பற்றி பொய்கள் மலிய - நீ அப்போதும் பொய்களில் ஈடுபடாமல் இருந்தால் உன்மீது வெறுப்பு உமிழப்பட்டும் நீ வெறுப்புக்கிடம்கொடாமல் இருந்தால் நல்லவனாகக் காட்டிக்கொள்ளாமல் அறிவாளிபோல் பேசாமல் இருந்தால் உன்னால் கனவு காணமுடிந்தால் அனால் கனவே உன்னை ஆளாமலிருந்தால் நீ சிந்திக்க முடிந்தாலும் சிந்தனைகளே இலக்காகக் கொள்ளாமலிருந்தால் வெற்றி தோல்வியைச் சந்திக்கையில் அம்மோசடிப்பேர்வழிகளைச் சமமாக எதிர்கொண்டால் பேசிய உண்மை போக்கிரிகளால் திரிக்கப்பட்டு முட்டாள்கள் பொறியில் சிக்கக் கதைக்கப்பட்டால் வாழ்வுகொடுத்த லட்சியங்கள் சிதறுபட்டுத் துண்டு துண்டாக நீ வைத்துக்கொண்டு தொடங்க நேரிட்டால் நீ ஈட்டிய வெற்றிகளைப் பணயம் வைத்து இழந்து மீண்டும் துவங்க நேர்ந்தால் அந்த சமயத்திலும் உன் இ...

Comments
Post a Comment