சுறுசுறுப்பான கிழ மூடா , விவஸ்தயற்ற சூரியனே
ஏன் இப்படி இதுபோல்
ஜன்னல் வழியாக திரைசீலைகள் தாண்டி வருகிறாய்?
உந்தன் அசைவுகளுக்கேற்ப காதலர் காமம் ஓடுமா?
போக்கிரியான எலாம் அறிந்த உதவாக்கரையே-போய் சாடு
தாமதிக்கும் பள்ளிச் சிறார்கள்-சலித்த பணியாட்களை!
போய்ச் சொல் அரசு வேட்டைக்காரர்களிடம் -'அரசன் வருகிறான்'...
நாட்டுக்கட்டை அம்மாமார்கள் அவரவர் பயிர்களை அறுவடை செய்யட்டும்
அனைவரையும் நேசி -ஒரே மாதிரி-இந்தப்பருவமும் ,நேரமும்
மணித்துளிகளும்.நாட்களும் ,மாதங்களும் காலத்தின் கந்தல்தான!

உந்தன் கதிர்கள் புனிதமானவை உறுதியானவை
இதுபற்றி நீ ஏன் யோசிக்கிறாய்-சூரியனே !
என்னால் உன்னை மறைக்கவும் மறுக்கவும்
முடியும்-ஓர் கண்சிமிட்டலில்!
ஆனால் அவளை பார்க்காமல் ஏன் இருக்கவேண்டும்?
அவளது கண்களின் ஒளியில் நீயே பார்வை அற்றுவிடுவாய் !
இங்கே பார்-நாளை பிற்பொழுதுகூட பதில் சொல்-
அந்த மணமிகு இந்தியாவோ மேற்திசை இந்தியாவோ
நீ விட்டுச் சென்றபோது எப்படியிருந்ததோ -அப்படியே இன்றும்
நேற்று நீ பார்த்த அரசர்களை அனைவரையும் பற்றிக்கேள்-
உனக்குத் தெரியவரும் -அனைவரும் ஒரே படுக்கையில்!

அவளே எல்லா நாடுகளாகவும்-நானே ராஜாக்களாகவும்-
வேறொன்றும் எங்கும் இல்லை-
ராஜாங்க விளையாட்டு-ஒப்பிட்டுப்பார்க்கின்
எல்லா மதிப்பும் மரியாதையும் ஓர் காட்சி -
எல்லா சொத்து பத்தும் ஓர் ரசவாதம்!
எங்களுக்கு உள்ள மகிழ்ச்சியில் பாதியாவது
உனக்கு உள்ளதா?உலகமே சிறுத்துள்ளது-
உன் வயதுக்கு ஓய்வு வேண்டும்-உலகை நீ
உஷ்ணப்படுத்துவதோடு-எங்களையும்தான்!
நீ இங்கேயே ஒளிர்க-நீ எங்கும் உலாவரும் சக்தி-
இந்தப் படுக்கை உன் மய்யம்- இச் சுவர்களோ உன் இடம்!

From Donne’s The Sun Rising..

Comments

Popular posts from this blog