நான் சிறுவனாய் இருந்த காலத்திலிருந்தே கலெக்டர்'ஸ் ஆபிஸ் டு திருப்பரங்குன்றம் பஸ்ஸில் ஏறி முருகப்பெருமானைத் தரிசித்து வந்திருக்கிறேன்.பின்னாளில் மூட்டா தோட்டத்திலுருந்தபோது பல நாட்கள் சென்று முருகன் அருளைப்பெற விழைந்திருக்கிறேன்.பெரிய ' ஓ 'வடிவத்தில், வெண்ணீறணிந்து தூரத்திலிருந்து பார்க்கையிலே கூட மனம் கவரும் மருகன் அவன்.இன்னும் சொல்லவேண்டுமானால் நாற்பத்து எட்டு நாட்கள் மலையைச் சுற்றி வந்துதான் மூட்டா தோட்டத்து இடமே எங்களுக்கு கிடைத்தது.கோவினுள் நுழையும்போது கருப்பண்ண சாமியை க ும்பிட்டுவிட்டு -விநாயகரை வணங்கி-நெடிய இரண்டாம் கட்ட நிலையைக் கடந்து மேலே சென்று பரந்துபட்ட நிலைக்கு வருவோம். இடதுபுறம் கோயில் குளத்தில் இறங்கி, உப்பு,மிளகு, வெல்லம் பொட்டலங்கள் வாங்கி தோஷ நிவர்த்தி செய்துவிட்டு,.அடுத்த கட்ட நிலைக்கு பல படிகள் ஏறி வந்து-கொடிமரத்தின்முன் விழுந்து வணங்கி பிரார்த்தனை செய்வோம்.கூட்டமில்லாப்பொழுதில் மிகப் பேரமைதியை நாம் அங்கெ உணரமுடியும்.இன்னும் மேலே சென்றால் -வலதுபுறம் கோவர்தனாம்பிகையை வணங்கிவிட்டு-மெயின் சன்னதிக்கு ஏறி வருகிறோம்.ஐந்து அற்புத மூலவர் விக்ரகங்களை ஒன்றன் ...
Popular posts from this blog
BASED ON -ELEGY WRITTEN IN A COUNTRY CHURCHYARD BY THOMAS GRAY முடிகின்ற நாளை அறிவித்து மணி ஒலி எழுப்பியது மேய்ச்சலை முடித்தே கத்தும் ஆவினம் திரும்பின ஏர் உழவர் தம் இல்லம் நோக்கி களைப்புடன் வந்தனர் இருட்டும் உலகமும் என்...னிடம் இப்போது மிஞ்சியது பார்வையிலிருந்து ஒளிர்ந்த காட்சி மெல்ல மறைகிறது எங்கெங்கும் காற்றில் நிரம்பிநின்றது அருள் பேரமைதி தட்டாம்பூச்சியின் கூச்சல்களும் பறத்தலுமே எஞ்சியது மயக்க நிலையே தாலாட்டுது தொலைதூரக் காட்சிகளை ஐவிகொடிபடர்ந்த அந்த ஆலயக்கோபுரஉச்சியில் மட்டும் முணுமுணுத்த ஆந்தை ஒன்று நிலவுக்குப் புகார் செய்தது ஏதோ அதன் ரஹஸ்ய அறையினுள் அத்துமீறியதாம் அதன் அக்காலம்தொட்டுவரும் வீட்டில் கேடு வந்துற்றதாம் அந்தக் கரடுமுரடான எல்ம்ஸ் மரங்கள் கீழ் , யூமர நிழலில் புற்கள் படர்ந்த மண் மேடு மேடாய்க் குவிந்து இருந்தன ஒவ்வொருவரும் தத்தம் இடத்தில் வெகுகாலமாக இருந்தனர் எம் முன்னோர்கள்தாம்-ஊர்நாட்டார் -எம் குடிலிலிருந்து சென்றார் நறுமணம்பரப்பும் இனிய காலைத் தென்றல் காற்று வைக்கோல் கூடுகளிலிருந்து ஒலியெழுப்பும் ஸ்வால்லோ சேவல்களின் கொக்கரக்கோ மற்றும் ...
Twelfth Night by William Shakespeare. ஆர்சினோ,கியூரியோ மற்ற பிரபுக்கள் வருகை-இசைக்கலைஞர்கள் இசைத்துக்கொண்டிருக்க- ஆர்சினோ:இசையே காதலுக்கு விருந்தாகும்-நன்கு பாடுங்கள்-எனக்கு அதிகமாகவே வேண்டும்- அளவுக்கு மிஞ்சி, நானே போதுமென்று சொல்லும்வரை---அந்த ராகத்தை மீண்டும் பாடுக-என்ன சோகம் ததும்பி! என் செவியில் தேனாய் இனிது கேட்கிறதே!கரையோர வயலெட் மலர்களின் மணம் போல்- மென் மேலும் எடுத்தும், கொடுத்தும் -போதும் போதும் -முன்பிருந்த இனிமை இப்போதில்லையே- காதல் தான் எத்தகைய விரைவில் மாறும் தன்மை கொண்டது!ஒரு நேரம் இனிக்கவும்,மறுபொழுது சலிக்கவும் செய்கிறதே!மிகப்பெரிய கடல்போல் விரிந்தும் -அதுவே எதுவும்கூடத் புகாமலும் இருப்பது விந்தையே! உயர்ந்துகொண்டே வந்தும் பின்னர் ஒன்றுமே இல்லாதுபோவதும் ஒரு நொடியில்!பற்பலவடிவங்கள் உடையதுதான் கற்பனை -அதுவே ஜாலம் பல செய்யும் எதையும் அதனுடன் ஒப்பிடமுடியாது. கியூரியோ:வேட்டையாடச் செல்லலாமா, பிரபுவே? ஆர்சினோ:எதையென்று சொல், கியூரியோ. கியூரியோ:மானைத்தான் ஆர்சினோ: அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன் -என் இதயமானைத்தான் வேட்டையாடுகிறேன் , முதன்முதலில் ஒலிவி...

Comments
Post a Comment