அதோ அவளைப் பார்-ஒற்றையாக வயல்காட்டில்-
- தன்னந் தனியே பணிபுரியும் மேட்டுநில மங்கை-
அறுவடை செய்துகொண்டு -தனக்குளே பாடிக்கொண்டும் !
சற்றேபொறு-அன்றி மெல்ல மெல்ல நடக்கலாம்
ஒரு ஆளாகவே கதிரறுத்தும்-கட்டி வைத்தும் ...
சோகப்பாட்டு ஒன்றை ஏகாந்தமாய்ப் பாடியும்!
ஓ கவனி-இவ்வகன்ற பள்ளத்தாக்கு முழுவதும்
அவளது பாட்டுதான் நிரம்பி வழிகிறதே!
அராபியப் பாலைவனத்தின் நிழல் தரும்சோலைகளில்
தங்கவரும் பயணியரிடை இப்படி ஓர் பாட்டை
எந்த ஒரு இரவுப் பறவையும் இசைத்திருக்குமா?
உலுக்கவைக்கும் இக்குரலினிமைபோல் -
ஹெப்ராய்ட்ஸ் தொலைத்தீவுகள் கடலோசையை விஞ்சி -
வசந்த காலத்திலும் எந்தக் குயிலும்
கூடப் பாடியிருக்க இயலாது!
எவரேனும் சொல்லமுடியுமா என்ன அந்தப்பாட்டு என?
கடந்தகால பழமையான நிகழ்வுகளா?
யுத்தங்களா--அவளது துன்பகீதம் ?
இன்றும்கூட நடக்கும் நமக்குத் தெரிந்த
சங்கதிகளை சிறு பாட்டாக இசைக்கிறாளோ?
ஏதேனும் இயற்கைப்பேரிடரோ-துன்பமோ,வலியோ?
ஒருகாலத்தில் நடந்ததோ-மீண்டும் நடக்க இருப்பதோ?
என்ன கருப்பொருளோ-அக்கன்னியின் பாட்டில்?
அவள் பாடப் பாட முடிவற்றே ஒலித்தது-
பணியினிடையும் கதிரறுக்கையிலும்
பாடிய அவள் பாட்டில் அசையா சிலையாய் நின்றேன்-
மீண்டும் மலைமீதேறி நடந்திடும்போதும்
நெஞ்சமெல்லாம் படர்ந்தது அவ்வினிய இசை-
வெகு காலம் ஒலித்து ஒலித்தும் ஓயவில்லை!
Based on The Solitary Reaper by William Wordsworth.
நான் சிறுவனாய் இருந்த காலத்திலிருந்தே கலெக்டர்'ஸ் ஆபிஸ் டு திருப்பரங்குன்றம் பஸ்ஸில் ஏறி முருகப்பெருமானைத் தரிசித்து வந்திருக்கிறேன்.பின்னாளில் மூட்டா தோட்டத்திலுருந்தபோது பல நாட்கள் சென்று முருகன் அருளைப்பெற விழைந்திருக்கிறேன்.பெரிய ' ஓ 'வடிவத்தில், வெண்ணீறணிந்து தூரத்திலிருந்து பார்க்கையிலே கூட மனம் கவரும் மருகன் அவன்.இன்னும் சொல்லவேண்டுமானால் நாற்பத்து எட்டு நாட்கள் மலையைச் சுற்றி வந்துதான் மூட்டா தோட்டத்து இடமே எங்களுக்கு கிடைத்தது.கோவினுள் நுழையும்போது கருப்பண்ண சாமியை க ும்பிட்டுவிட்டு -விநாயகரை வணங்கி-நெடிய இரண்டாம் கட்ட நிலையைக் கடந்து மேலே சென்று பரந்துபட்ட நிலைக்கு வருவோம். இடதுபுறம் கோயில் குளத்தில் இறங்கி, உப்பு,மிளகு, வெல்லம் பொட்டலங்கள் வாங்கி தோஷ நிவர்த்தி செய்துவிட்டு,.அடுத்த கட்ட நிலைக்கு பல படிகள் ஏறி வந்து-கொடிமரத்தின்முன் விழுந்து வணங்கி பிரார்த்தனை செய்வோம்.கூட்டமில்லாப்பொழுதில் மிகப் பேரமைதியை நாம் அங்கெ உணரமுடியும்.இன்னும் மேலே சென்றால் -வலதுபுறம் கோவர்தனாம்பிகையை வணங்கிவிட்டு-மெயின் சன்னதிக்கு ஏறி வருகிறோம்.ஐந்து அற்புத மூலவர் விக்ரகங்களை ஒன்றன் ...
Comments
Post a Comment