அதோ அவளைப் பார்-ஒற்றையாக வயல்காட்டில்-
- தன்னந் தனியே பணிபுரியும் மேட்டுநில மங்கை-
அறுவடை செய்துகொண்டு -தனக்குளே பாடிக்கொண்டும் !
சற்றேபொறு-அன்றி மெல்ல மெல்ல நடக்கலாம்
ஒரு ஆளாகவே கதிரறுத்தும்-கட்டி வைத்தும் ...
சோகப்பாட்டு ஒன்றை ஏகாந்தமாய்ப் பாடியும்!
ஓ கவனி-இவ்வகன்ற பள்ளத்தாக்கு முழுவதும்
அவளது பாட்டுதான் நிரம்பி வழிகிறதே!
அராபியப் பாலைவனத்தின் நிழல் தரும்சோலைகளில்
தங்கவரும் பயணியரிடை இப்படி ஓர் பாட்டை
எந்த ஒரு இரவுப் பறவையும் இசைத்திருக்குமா?
உலுக்கவைக்கும் இக்குரலினிமைபோல் -
ஹெப்ராய்ட்ஸ் தொலைத்தீவுகள் கடலோசையை விஞ்சி -
வசந்த காலத்திலும் எந்தக் குயிலும்
கூடப் பாடியிருக்க இயலாது!
எவரேனும் சொல்லமுடியுமா என்ன அந்தப்பாட்டு என?
கடந்தகால பழமையான நிகழ்வுகளா?
யுத்தங்களா--அவளது துன்பகீதம் ?
இன்றும்கூட நடக்கும் நமக்குத் தெரிந்த
சங்கதிகளை சிறு பாட்டாக இசைக்கிறாளோ?
ஏதேனும் இயற்கைப்பேரிடரோ-துன்பமோ,வலியோ?
ஒருகாலத்தில் நடந்ததோ-மீண்டும் நடக்க இருப்பதோ?
என்ன கருப்பொருளோ-அக்கன்னியின் பாட்டில்?
அவள் பாடப் பாட முடிவற்றே ஒலித்தது-
பணியினிடையும் கதிரறுக்கையிலும்
பாடிய அவள் பாட்டில் அசையா சிலையாய் நின்றேன்-
மீண்டும் மலைமீதேறி நடந்திடும்போதும்
நெஞ்சமெல்லாம் படர்ந்தது அவ்வினிய இசை-
வெகு காலம் ஒலித்து ஒலித்தும் ஓயவில்லை!
Based on The Solitary Reaper by William Wordsworth.
கடவுள் மர்மமான வழிகளில் நடக்கிறார் தனது அற்புதங்களை நிகழ்த்தவே தனது காலடிகளைக் கடலின்மீது பதிக்கிறார் பெரும் புயலின்மீதும் சவாரி செய்கிறார் அளக்கமுடியா சுரங்கங்களின் அடியினில் ஆழ்ந்து தோற்கவே முடியா தனது தேர்ச்சிபெற்ற திறனுடன் தனது ஒளிமிகுத் திட்டங்களை சேமிக்கும் வல்லவர் தன் ஊடுருவமுடியா சங்கல்பத்தை முடிக்கிறார் கடவுளுக்கு பயப்படும் முனிவர்காள், புதுதைரியம் பெறுக நீவிர் நடுங்கும் மேகமெல்லாம் உண்மையில் அவர்கருணை பெற்றதே,அதுவுமன்றி அவர்தாம் அவைகளை உன்தலைமீது விழும் ஆசிகளாய் மாற்றுவார் மதிப்பிடாதீர் ப்ரபுவைத் தங்கள் பலவீனமான குணத்துடன் நம்புங்கள் அவரை அவரது கருணைக்காக முறைத்துப்பார்ப்பதுபோல் இருக்கும் மகா சக்தி அவர் மறைத்துள்ளார் தனது சிரிக்கும் முகத்தை அவர்தம் குறிக்கோள் விரைவில் பலன் தரும் ஒவ்வொருமணித்துளியிலும் வெளிப்படும் மொட்டாக இருப்பது கசப்பாகத்தெரியும் ஆனால் இனிமையானதுதான் எந்த மலரும் கண்மூடித்தன நம்பிக்கை தவறுக்கு இடமாகும் அவர்தம் செயலை ஆராய்வது வீணானது கடவுளே அவரது பொருளை விளங்குபவர் அது என்றென்றும் எளிமை மட்டும் உடையது Based on William C...
Comments
Post a Comment