அதோ அவளைப் பார்-ஒற்றையாக வயல்காட்டில்-
- தன்னந் தனியே பணிபுரியும் மேட்டுநில மங்கை-
அறுவடை செய்துகொண்டு -தனக்குளே பாடிக்கொண்டும் !
சற்றேபொறு-அன்றி மெல்ல மெல்ல நடக்கலாம்
ஒரு ஆளாகவே கதிரறுத்தும்-கட்டி வைத்தும் ...
சோகப்பாட்டு ஒன்றை ஏகாந்தமாய்ப் பாடியும்!
ஓ கவனி-இவ்வகன்ற பள்ளத்தாக்கு முழுவதும்
அவளது பாட்டுதான் நிரம்பி வழிகிறதே!
அராபியப் பாலைவனத்தின் நிழல் தரும்சோலைகளில்
தங்கவரும் பயணியரிடை இப்படி ஓர் பாட்டை
எந்த ஒரு இரவுப் பறவையும் இசைத்திருக்குமா?
உலுக்கவைக்கும் இக்குரலினிமைபோல் -
ஹெப்ராய்ட்ஸ் தொலைத்தீவுகள் கடலோசையை விஞ்சி -
வசந்த காலத்திலும் எந்தக் குயிலும்
கூடப் பாடியிருக்க இயலாது!
எவரேனும் சொல்லமுடியுமா என்ன அந்தப்பாட்டு என?
கடந்தகால பழமையான நிகழ்வுகளா?
யுத்தங்களா--அவளது துன்பகீதம் ?
இன்றும்கூட நடக்கும் நமக்குத் தெரிந்த
சங்கதிகளை சிறு பாட்டாக இசைக்கிறாளோ?
ஏதேனும் இயற்கைப்பேரிடரோ-துன்பமோ,வலியோ?
ஒருகாலத்தில் நடந்ததோ-மீண்டும் நடக்க இருப்பதோ?
என்ன கருப்பொருளோ-அக்கன்னியின் பாட்டில்?
அவள் பாடப் பாட முடிவற்றே ஒலித்தது-
பணியினிடையும் கதிரறுக்கையிலும்
பாடிய அவள் பாட்டில் அசையா சிலையாய் நின்றேன்-
மீண்டும் மலைமீதேறி நடந்திடும்போதும்
நெஞ்சமெல்லாம் படர்ந்தது அவ்வினிய இசை-
வெகு காலம் ஒலித்து ஒலித்தும் ஓயவில்லை!
Based on The Solitary Reaper by William Wordsworth.
BASED ON -ELEGY WRITTEN IN A COUNTRY CHURCHYARD BY THOMAS GRAY முடிகின்ற நாளை அறிவித்து மணி ஒலி எழுப்பியது மேய்ச்சலை முடித்தே கத்தும் ஆவினம் திரும்பின ஏர் உழவர் தம் இல்லம் நோக்கி களைப்புடன் வந்தனர் இருட்டும் உலகமும் என்...னிடம் இப்போது மிஞ்சியது பார்வையிலிருந்து ஒளிர்ந்த காட்சி மெல்ல மறைகிறது எங்கெங்கும் காற்றில் நிரம்பிநின்றது அருள் பேரமைதி தட்டாம்பூச்சியின் கூச்சல்களும் பறத்தலுமே எஞ்சியது மயக்க நிலையே தாலாட்டுது தொலைதூரக் காட்சிகளை ஐவிகொடிபடர்ந்த அந்த ஆலயக்கோபுரஉச்சியில் மட்டும் முணுமுணுத்த ஆந்தை ஒன்று நிலவுக்குப் புகார் செய்தது ஏதோ அதன் ரஹஸ்ய அறையினுள் அத்துமீறியதாம் அதன் அக்காலம்தொட்டுவரும் வீட்டில் கேடு வந்துற்றதாம் அந்தக் கரடுமுரடான எல்ம்ஸ் மரங்கள் கீழ் , யூமர நிழலில் புற்கள் படர்ந்த மண் மேடு மேடாய்க் குவிந்து இருந்தன ஒவ்வொருவரும் தத்தம் இடத்தில் வெகுகாலமாக இருந்தனர் எம் முன்னோர்கள்தாம்-ஊர்நாட்டார் -எம் குடிலிலிருந்து சென்றார் நறுமணம்பரப்பும் இனிய காலைத் தென்றல் காற்று வைக்கோல் கூடுகளிலிருந்து ஒலியெழுப்பும் ஸ்வால்லோ சேவல்களின் கொக்கரக்கோ மற்றும் ...
Comments
Post a Comment