- எது உனக்குத் துன்பம் தந்தது -குதிரைவீரா!
தனியே சுற்றிச் சுற்றி வருகிறாயே!
ஏரியும் வற்றியது-செடிகளும் வாடின-
ஒரு பறவையும் பாடுவதில்லை!
...
எதனால் உனக்கு கேடு-குதிரைவீரா!See more
ஏன் இப்படி ஓய்ந்துபோய்-சோகமாய்?
அணில்கள் களஞ்சியம் நிரம்பியுள்ளது-
அறுவடையும் நன்கு முடிவுற்றது.
உன் முகம் ஏன் லில்லி மலராய் வெளுத்திருக்கு-
முத்து முத்தாய் வியர்வை பூத்திருக்கு -
சோகையில் சோர்ந்து மங்கியிருக்கு-
உன் பளபளக்கும் கன்னமெல்லாம்!
குதிரைவீரன்: வயலருகே ஒருகன்னிப்பெண்!
அழகு அவள் அழகு -தேவதையைப்
பார்த்தேன்-நீள்குழலும் சிற்றடியும் கூடி-
ஆனால் கண்கள் இரண்டிலும் கடுமை!
அவள் தலையில் சூட மலர்வளையம் செய்தேன்
கரங்களுக்கும் இடைக்கும் அணிவித்தேன்--
பார்த்தாள் என்னை-மையலுற்றாள்மனமுவந்து-
கலந்தோம்-உவகையில்-களித்தே மகிழ்ந்தோம்!
எனது குதிரையில் அவளை அமர்த்தி விரைந்தோம்
பயணித்தோம்-நாள் முழுவதும்-சென்றோம்-
ஓரக்கண்ணால் பார்த்தவாறே என்னை மயக்கினாள்-
கதைகளில்வரும் ரதியைப்போல் பாடிப்பாடி !
ருசிமிக்க கிழங்குகளும் இனிப்பு ரசமும்
உண்ணவும் பருகவும் தந்தாள்-அமிர்தமே!
புரியா மொழியில் விசும்பினாள்-உரைத்தாள்-
"நான் மிகமிக நேசிப்பது உன்னையே-உண்மையே "
வனதேவதை உலவிடும் குகைக்கே சென்றோம்
விம்மினாள்-விகாசித்துப் பெருமூச்செரிந்தாள்!
நானும் மயங்கி அவள் கண்களைப் பொத்தியே-
நான்குமுறை இனியவே முத்தமிட்டு மகிழ்ந்தேன்!
தாலாட்டித் தாலாட்டித் தூங்க வைத்தாள் என்னை
சுகமாக கிறங்கி உறங்கினேன்-என்ன கொடிய கனவு!
எல்லாம் போயிற்று-எல்லாமே போயிற்று-என்ன இது?
அந்தக் குகையினுள் குளிர்ந்த மலையருகே-
நோயுற்றோர்போல் வெளுத்துப்போன அரசர்களை
இளவரசர்கள் - பெரும் வீரர்கள்-சோகத்தில் பார்த்தேன்!
உரக்கவே கூவினர் என்னைப் பார்த்து-"அய்யகோ!
உன்னையும் சிறை பிடித்து விட்டாளே!"-என்றே..
அவர்களின் உலர்ந்த உதடுகளைக் கண்டு வருந்தினேன்
வாய்பிளந்து அச்சத்தில் நின்றனர் மங்கிய ஒளியில் -
கண் விழித்துப் பார்த்தேன்-இங்கே நிற்கின்றேன்-
குளிர்மிகு இம் மலையருகே- தன்னந்தனியே!
இதுவே இங்கு நான் உலவிவருவதின் நோக்கம்-
யாருமற்றும் நோயில் இருப்பவன்போல் -
ஏரிஓரச் செடிகளும் கருகின-ஏரியும் வற்றி-
யாதொரு பறவையும் பாடுவதும் கேட்கிலேன்!"
Based on John Keats' La Belle Dame sans merci.
கடவுள் மர்மமான வழிகளில் நடக்கிறார் தனது அற்புதங்களை நிகழ்த்தவே தனது காலடிகளைக் கடலின்மீது பதிக்கிறார் பெரும் புயலின்மீதும் சவாரி செய்கிறார் அளக்கமுடியா சுரங்கங்களின் அடியினில் ஆழ்ந்து தோற்கவே முடியா தனது தேர்ச்சிபெற்ற திறனுடன் தனது ஒளிமிகுத் திட்டங்களை சேமிக்கும் வல்லவர் தன் ஊடுருவமுடியா சங்கல்பத்தை முடிக்கிறார் கடவுளுக்கு பயப்படும் முனிவர்காள், புதுதைரியம் பெறுக நீவிர் நடுங்கும் மேகமெல்லாம் உண்மையில் அவர்கருணை பெற்றதே,அதுவுமன்றி அவர்தாம் அவைகளை உன்தலைமீது விழும் ஆசிகளாய் மாற்றுவார் மதிப்பிடாதீர் ப்ரபுவைத் தங்கள் பலவீனமான குணத்துடன் நம்புங்கள் அவரை அவரது கருணைக்காக முறைத்துப்பார்ப்பதுபோல் இருக்கும் மகா சக்தி அவர் மறைத்துள்ளார் தனது சிரிக்கும் முகத்தை அவர்தம் குறிக்கோள் விரைவில் பலன் தரும் ஒவ்வொருமணித்துளியிலும் வெளிப்படும் மொட்டாக இருப்பது கசப்பாகத்தெரியும் ஆனால் இனிமையானதுதான் எந்த மலரும் கண்மூடித்தன நம்பிக்கை தவறுக்கு இடமாகும் அவர்தம் செயலை ஆராய்வது வீணானது கடவுளே அவரது பொருளை விளங்குபவர் அது என்றென்றும் எளிமை மட்டும் உடையது Based on William C...
Comments
Post a Comment