- எது உனக்குத் துன்பம் தந்தது -குதிரைவீரா!
தனியே சுற்றிச் சுற்றி வருகிறாயே!
ஏரியும் வற்றியது-செடிகளும் வாடின-
ஒரு பறவையும் பாடுவதில்லை!
...
எதனால் உனக்கு கேடு-குதிரைவீரா!See more
ஏன் இப்படி ஓய்ந்துபோய்-சோகமாய்?
அணில்கள் களஞ்சியம் நிரம்பியுள்ளது-
அறுவடையும் நன்கு முடிவுற்றது.
உன் முகம் ஏன் லில்லி மலராய் வெளுத்திருக்கு-
முத்து முத்தாய் வியர்வை பூத்திருக்கு -
சோகையில் சோர்ந்து மங்கியிருக்கு-
உன் பளபளக்கும் கன்னமெல்லாம்!
குதிரைவீரன்: வயலருகே ஒருகன்னிப்பெண்!
அழகு அவள் அழகு -தேவதையைப்
பார்த்தேன்-நீள்குழலும் சிற்றடியும் கூடி-
ஆனால் கண்கள் இரண்டிலும் கடுமை!
அவள் தலையில் சூட மலர்வளையம் செய்தேன்
கரங்களுக்கும் இடைக்கும் அணிவித்தேன்--
பார்த்தாள் என்னை-மையலுற்றாள்மனமுவந்து-
கலந்தோம்-உவகையில்-களித்தே மகிழ்ந்தோம்!
எனது குதிரையில் அவளை அமர்த்தி விரைந்தோம்
பயணித்தோம்-நாள் முழுவதும்-சென்றோம்-
ஓரக்கண்ணால் பார்த்தவாறே என்னை மயக்கினாள்-
கதைகளில்வரும் ரதியைப்போல் பாடிப்பாடி !
ருசிமிக்க கிழங்குகளும் இனிப்பு ரசமும்
உண்ணவும் பருகவும் தந்தாள்-அமிர்தமே!
புரியா மொழியில் விசும்பினாள்-உரைத்தாள்-
"நான் மிகமிக நேசிப்பது உன்னையே-உண்மையே "
வனதேவதை உலவிடும் குகைக்கே சென்றோம்
விம்மினாள்-விகாசித்துப் பெருமூச்செரிந்தாள்!
நானும் மயங்கி அவள் கண்களைப் பொத்தியே-
நான்குமுறை இனியவே முத்தமிட்டு மகிழ்ந்தேன்!
தாலாட்டித் தாலாட்டித் தூங்க வைத்தாள் என்னை
சுகமாக கிறங்கி உறங்கினேன்-என்ன கொடிய கனவு!
எல்லாம் போயிற்று-எல்லாமே போயிற்று-என்ன இது?
அந்தக் குகையினுள் குளிர்ந்த மலையருகே-
நோயுற்றோர்போல் வெளுத்துப்போன அரசர்களை
இளவரசர்கள் - பெரும் வீரர்கள்-சோகத்தில் பார்த்தேன்!
உரக்கவே கூவினர் என்னைப் பார்த்து-"அய்யகோ!
உன்னையும் சிறை பிடித்து விட்டாளே!"-என்றே..
அவர்களின் உலர்ந்த உதடுகளைக் கண்டு வருந்தினேன்
வாய்பிளந்து அச்சத்தில் நின்றனர் மங்கிய ஒளியில் -
கண் விழித்துப் பார்த்தேன்-இங்கே நிற்கின்றேன்-
குளிர்மிகு இம் மலையருகே- தன்னந்தனியே!
இதுவே இங்கு நான் உலவிவருவதின் நோக்கம்-
யாருமற்றும் நோயில் இருப்பவன்போல் -
ஏரிஓரச் செடிகளும் கருகின-ஏரியும் வற்றி-
யாதொரு பறவையும் பாடுவதும் கேட்கிலேன்!"
Based on John Keats' La Belle Dame sans merci.
BASED ON -ELEGY WRITTEN IN A COUNTRY CHURCHYARD BY THOMAS GRAY முடிகின்ற நாளை அறிவித்து மணி ஒலி எழுப்பியது மேய்ச்சலை முடித்தே கத்தும் ஆவினம் திரும்பின ஏர் உழவர் தம் இல்லம் நோக்கி களைப்புடன் வந்தனர் இருட்டும் உலகமும் என்...னிடம் இப்போது மிஞ்சியது பார்வையிலிருந்து ஒளிர்ந்த காட்சி மெல்ல மறைகிறது எங்கெங்கும் காற்றில் நிரம்பிநின்றது அருள் பேரமைதி தட்டாம்பூச்சியின் கூச்சல்களும் பறத்தலுமே எஞ்சியது மயக்க நிலையே தாலாட்டுது தொலைதூரக் காட்சிகளை ஐவிகொடிபடர்ந்த அந்த ஆலயக்கோபுரஉச்சியில் மட்டும் முணுமுணுத்த ஆந்தை ஒன்று நிலவுக்குப் புகார் செய்தது ஏதோ அதன் ரஹஸ்ய அறையினுள் அத்துமீறியதாம் அதன் அக்காலம்தொட்டுவரும் வீட்டில் கேடு வந்துற்றதாம் அந்தக் கரடுமுரடான எல்ம்ஸ் மரங்கள் கீழ் , யூமர நிழலில் புற்கள் படர்ந்த மண் மேடு மேடாய்க் குவிந்து இருந்தன ஒவ்வொருவரும் தத்தம் இடத்தில் வெகுகாலமாக இருந்தனர் எம் முன்னோர்கள்தாம்-ஊர்நாட்டார் -எம் குடிலிலிருந்து சென்றார் நறுமணம்பரப்பும் இனிய காலைத் தென்றல் காற்று வைக்கோல் கூடுகளிலிருந்து ஒலியெழுப்பும் ஸ்வால்லோ சேவல்களின் கொக்கரக்கோ மற்றும் ...

Comments
Post a Comment