1. எது உனக்குத் துன்பம் தந்தது -குதிரைவீரா!
    தனியே சுற்றிச் சுற்றி வருகிறாயே!
    ஏரியும் வற்றியது-செடிகளும் வாடின-
    ஒரு பறவையும் பாடுவதில்லை!
    ...
    எதனால் உனக்கு கேடு-குதிரைவீரா!
    ஏன் இப்படி ஓய்ந்துபோய்-சோகமாய்?
    அணில்கள் களஞ்சியம் நிரம்பியுள்ளது-
    அறுவடையும் நன்கு முடிவுற்றது.
    உன் முகம் ஏன் லில்லி மலராய் வெளுத்திருக்கு-
    முத்து முத்தாய் வியர்வை பூத்திருக்கு -
    சோகையில் சோர்ந்து மங்கியிருக்கு-
    உன் பளபளக்கும் கன்னமெல்லாம்!
    குதிரைவீரன்: வயலருகே ஒருகன்னிப்பெண்!
    அழகு அவள் அழகு -தேவதையைப்
    பார்த்தேன்-நீள்குழலும் சிற்றடியும் கூடி-
    ஆனால் கண்கள் இரண்டிலும் கடுமை!
    அவள் தலையில் சூட மலர்வளையம் செய்தேன்
    கரங்களுக்கும் இடைக்கும் அணிவித்தேன்--
    பார்த்தாள் என்னை-மையலுற்றாள்மனமுவந்து-
    கலந்தோம்-உவகையில்-களித்தே மகிழ்ந்தோம்!
    எனது குதிரையில் அவளை அமர்த்தி விரைந்தோம்
    பயணித்தோம்-நாள் முழுவதும்-சென்றோம்-
    ஓரக்கண்ணால் பார்த்தவாறே என்னை மயக்கினாள்-
    கதைகளில்வரும் ரதியைப்போல் பாடிப்பாடி !
    ருசிமிக்க கிழங்குகளும் இனிப்பு ரசமும்
    உண்ணவும் பருகவும் தந்தாள்-அமிர்தமே!
    புரியா மொழியில் விசும்பினாள்-உரைத்தாள்-
    "நான் மிகமிக நேசிப்பது உன்னையே-உண்மையே "
    வனதேவதை உலவிடும் குகைக்கே சென்றோம்
    விம்மினாள்-விகாசித்துப் பெருமூச்செரிந்தாள்!
    நானும் மயங்கி அவள் கண்களைப் பொத்தியே-
    நான்குமுறை இனியவே முத்தமிட்டு மகிழ்ந்தேன்!
    தாலாட்டித் தாலாட்டித் தூங்க வைத்தாள் என்னை
    சுகமாக கிறங்கி உறங்கினேன்-என்ன கொடிய கனவு!
    எல்லாம் போயிற்று-எல்லாமே போயிற்று-என்ன இது?
    அந்தக் குகையினுள் குளிர்ந்த மலையருகே-
    நோயுற்றோர்போல் வெளுத்துப்போன அரசர்களை
    இளவரசர்கள் - பெரும் வீரர்கள்-சோகத்தில் பார்த்தேன்!
    உரக்கவே கூவினர் என்னைப் பார்த்து-"அய்யகோ!
    உன்னையும் சிறை பிடித்து விட்டாளே!"-என்றே..
    அவர்களின் உலர்ந்த உதடுகளைக் கண்டு வருந்தினேன்
    வாய்பிளந்து அச்சத்தில் நின்றனர் மங்கிய ஒளியில் -
    கண் விழித்துப் பார்த்தேன்-இங்கே நிற்கின்றேன்-
    குளிர்மிகு இம் மலையருகே- தன்னந்தனியே!
    இதுவே இங்கு நான் உலவிவருவதின் நோக்கம்-
    யாருமற்றும் நோயில் இருப்பவன்போல் -
    ஏரிஓரச் செடிகளும் கருகின-ஏரியும் வற்றி-
    யாதொரு பறவையும் பாடுவதும் கேட்கிலேன்!"
    Based on John Keats' La Belle Dame sans merci.
    See more

Comments

Popular posts from this blog